tamilnadu

img

4 மாவட்ட மக்களுக்கு புயல் நிவாரண நிதி

சென்னை, டிச. 17- மிக்ஜம் புயல் நிவாரண நிதி ரூ.6000 வழங்கும் திட்டத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை யில்  ஞாயிறன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் டிசம்பர் 3, 4ஆம் தேதிகளில் மிக்ஜம் புயல் காரண மாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் பெரும்பா லான பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள் ளது.

இந்நிலையில், மிக்ஜம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக் கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதை யடுத்து நிவாரணத் தொகைக்கு கடந்த வியாழக்கிழமை பிற்பகல் முதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை  வேளச்சேரியில் உள்ள நியாய விலைக் கடையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கி தொடங்கி வைத்தார்.

அடுத்து வரும் நாட்களில், நியாய விலைக் கடைகளில் முற்பகல் 9 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையும் நிவாரணத் தொகை  மற்றும் படிவம் வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்நிலையில் மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும் என முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து ள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத் தில் கூறப்பட்டுள்ளதாவது.

மழை காரணமாக வாழ்வா தாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்க ளுக்கு நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கும் பணியை சென்னை வேளச்சேரியில் துவக்கி வைத்தேன். பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு ரூ. 1486 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 24 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறுவர். மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட் டுள்ளது.