tamilnadu

img

புயல் - மழை வெள்ளத்தில் சிக்கிய பயணிகள்; அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ரயில்வே ஊழியர்கள்

சென்னை, டிச. 2 - சென்னை-விழுப்புரம் இடையே யான முக்கிய ரயில் பாதையில் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால், பல ரயில்கள் இடைநிறுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான பயணிகள் சிர மத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், இந்திய ரயில்வேயின் நாடாளுமன்ற ஆலோசனைக்குழு உறுப்பினரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன், நிலைமையை நேரடியாக கண்காணித்து வருகிறார். காலை முதல் கவலையடைந்த பயணிகளும் அவர்களின் உறவினர் களும் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகின்றனர். வெங்கடேசன் எம்.பி. ஒருபுறம் பயணி களுடனும், மறுபுறம் தெற்கு ரயில்வே  தலைமையகத்துடனும் தொடர்பில் இருந்து நிலைமையை கையாண்டு வருகிறார்.

தென் மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி வந்த பெரும் பாலான ரயில்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டுள் ளன. சென்னை-விழுப்புரம் பிரதான பாதையில் ஏற்பட்ட சேதங்கள் விரை வில் சரிசெய்யப்படும் என ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இதனால் இன்று இரவு சென்னையி லிருந்து புறப்படும் ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பாதிக்கப்பட்ட பயணிகளின் நலனுக்காக ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள்: - மொத்தம் 27 சிறப்பு பேருந்துகள் மூலம் 2,700-க்கும் மேற்பட்ட பய ணிகள் சென்னைக்கு அனுப்பப் பட்டுள்ளனர். 3,000-க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களும், குடிநீர் பாட்டில்களும் விநியோகிக்கப் பட்டுள்ளன. மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம், விழுப்புரம் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் பயணிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.  

வெள்ளப்பெருக்கின் மத்தியில் தண்டவாளப் பாதைகளை சீர மைக்கும் ரயில்வே ஊழியர்களின் அர்ப்பணிப்பும், பயணிகளின் பொறுமையும் பாராட்டத்தக்கது. இயற்கைச் சீற்றங்களை எதிர் கொண்டு மீளும் மனித சமூகத்தின் வலிமை இங்கு வெளிப்படுகிறது என வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள் ளார்.