சென்னை, மார்ச் 29 - தமிழகத்தில் அதிகப்படி யான வாக்கு வித்தியாசத் தில் வெற்றி பெறுவதை மட்டுமே இலக்காக வைத்து பிரச்சாரம் செய்வதாக திமுக வேட்பாளர் த.சுமதி ( எ ) தமிழச்சி தங்கபாண்டி யன் கூறினார். இந்தியா கூட்டணியின் தென்சென்னை மக்கள வைத் தொகுதி திமுக வேட் பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் வியா ழனன்று (மார்ச் 28) தி.நகர் பகுதியில் வாக்கு சேகரித் தார்.
காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நடக்க முடியாத நிலையிலும், பிரச்சார வாகனத்தில் அமர்ந்தபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தி.நகர் தொகுதிக்குட் பட்ட குதி சிஐடி நகரில் பிரச்சாரத்தை தொடங்கி வீதிவீதியாக சென்று வாக்கு கேட்ட அவருக்கு வழி நெடுக்க மக்கள் ஆரத்தி எடுத்து, தேங்காய் உடைத்து, மலர்தூவி, ஆடை போர்த்தி வரவேற்றனர். அப்போது செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: தொகுதி முழுவதும் உள்ள ரயில்வே துறை சார்ந்த பிரச்சனைகளுக்காக அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, தெற்கு ரயில்வே பொது மேலாள ருக்கு குறைகளை மனு வாக அளித்துள்ளேன். ஆய்வு கூட்டங்களில் ரயில்வே துறை சார்ந்த பிரச்சனைகளுக்காக பேசியுள்ளேன்.
அதன் விளைவாக மாம்பலம், சைதாப்பேட்டை ரயில் நிலையங்களில் பழுத டைந்த மேற்கூரைகள் மாற்றப்பட்டது. தரமணி ரயில் நிலைய சாலையில் ரூ1.68 கோடி மதிப்பீட்டில் 100க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. மயிலாப் பூர் முண்டகக்கண்ணி யம்மன் கோவில் ரயில் நிலை யத்தில் நுழைவு வாயில் ஏற்படுத்தி தரப்பட்டது. வேளச்சேரி - புனித தோமையர் மலை ரயில் பாதை இணைப்பிற்காக, நாடாளுமன்றத்தில் பல முறை பேசியதோடு, துறை யின் அமைச்சரை சந்தித்தும் கோரிக்கை வைத்தேன். அதன்பிறகே நிலம் கையகப் படுத்துதல் முடிக்கப்பட்டு, பணி மீண்டும் துவங்கப் பட்டுள்ளது. மெட்ரோ ரயில் குறித்தும் பல முறை நாடாளு மன்றத்தில் பேசியுள்ளேன்.
தென்சென்னை தொகுதி யில் எங்களுக்கு யாரும் போட்டியில்லை, எங்களின் இலக்கு என்பது தமிழகத்தில் அதிகப்படியாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதை இலக்காக வைத்து பிரச்சாரம் செய்கிறோம்.
வாக்கு சேகரிக்க செல் லும் இடமெல்லாம் மக்களின் வரவேற்பை காணும்போது, இந்தியா கூட்டணி 40 தொகுதிகளி லும் வெற்றி பெறுவது உறுதி யாகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வின்போது திமுக சென்னை தென் மேற்கு மாவட்டச் செயலா ளர் த.வேலு எம்எல்ஏ, தி.நகர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.கரு ணாநிதி, தி.நகர் பகுதிச் செயலாளர் ஏழுமலை, சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், தி.நகர் பகுதிச் செயலாளர் இ.மூர்த்தி உள்ளிட்டு ஏராளமானோர் கலந்து கொண்டனர்.