நாகப்பட்டினம், டிச.10- நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 25 மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அவர் களை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அவர்களை விசார ணைக்காக காங்கேசன்துறை துறை முகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் என். ராஜேஷ், எஸ். பாஸ்கர், இ. நாகை யன், கே. திவ்யந்தன், எஸ். மாயவன், டி. பாக்கியராஜ், எஸ். சக்திவேல், உ. மணிகண்டன், கே. ராமச்சந்திரன், ஆர். கோதண்டபாணி, ஆர்.ராமச்சந்தி ரன், ஆர். செல்வமணி ஆகியோர் நாகப் பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்க ரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் கடற்கரைக் கிராமங்களை சேர்ந்த வர்கள் ஆவர். இவர்கள் அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த என். ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான இயந்தி ரப் படகில் டிசம்பர் 5 அன்று மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர்.
அதேநாளில், காரைக்கால் கிளிஞ்சல்மேட்டிலிருந்து இயந்திரப் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற என். கிருஷ்ணராஜ், என். செல்வம், எஸ். சந்தோஷ், எம். சரண் மற்றும் காரைக்கால் மாவட்டம் திருமலை ராயன்பட்டினத்தைச் சேர்ந்த ஆர். விஜயன், ஆர். வையாபுரி, எஸ். அஜித், எஸ். சுகன், சாமந்தம்பேட்டையைச் சேர்ந்த எஸ். கலைமணி, கீச்சாங்குப் பத்தைச் சேர்ந்த வி. ஸ்ரீநாத், நாகப் பட்டினம் மாவட்டம் அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த ஜி. சிவ நாதன், மயிலாடுதுறை மாவட்டம், சந்திரபாடியைச் சேர்ந்த எஸ். வைத்தியநாதன், தரங்கம்பாடியைச் சேர்ந்த என். அருள்மூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப் பட்டு உள்ளதாகவும், அவர்களது இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப் பட்டு உள்ளதாகவும், இலங்கைக் கடற்படையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் விசா ரணைக்காக அவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
2023-ஆம் ஆண்டில் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி இலங்கைக் கடற் படையினர் மொத்தம் 33 இழுவைப் படகுகளையும் 220 தமிழக - புதுச்சேரி மீனவர்களை கைது செய்துள்ளதாக வும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டு உள்ளது.
மீனவர்கள் கைது குறித்து, மீனவர் சங்கத் தலைவர் ராஜேந்திர நாட்டார் கூறுகையில், “மீனவர்களின் வாழ்வா தாரத்தைக் கருத்தில் கொண்டு இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இலங்கைக் கடற்படை யால் கைது செய்யப்பட்டுள்ள மீன வர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகளை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.