சென்னை ஜூலை 1- இலங்கை தமிழரசுக் கட்சியின் தலை வரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் (91) வயது மூப்பின் காரணமாக ஞாயிறன்று இரவு காலமானார்.
இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த இரா.சம்பந்தன். முதல் முறையாக 1977-இல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்பட்டு, 1983 வரை பதவி வகித்தார் அதன் பின்னர் 2001 முதல் தற்போது இறக்கும் வரை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து வந்தார். இலங்கை தமிழர்களின் உரிமைக்காக இலங்கை நாடாளுமன்றத்தில் முக்கிய குரலாக ஒலித்து வந்தார்.
இதனிடையே, வயது மூப்பு காரணமாக சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப் பட்டு கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த இரா. சம்பந்தன் ஞாயிறன்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும், முதல் வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலை வர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
“தந்தை செல்வா, நாவலர், அமிர்த லிங்கம் ஆகியோருக்குப் பிறகு, இலங்கை அரசியலில் மிகவும் போற்றத்தக்க தலைவ ராக விளக்கியவர். தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் மரியாதையைப் பெற்ற அரும்பெரும் தலைவராகத் திகழ்ந்தார் சம்பந்தன். இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்த அவரின் மறைவு அனை வருக்கும் பேரிழப்பு. தமிழ்நாட்டு மக்கள் சார்பிலும் எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்க லையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் தனது இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக சக்திகள் - இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பேரிழப்பு; சிபிஎம் இரங்கல்!
இரா. சம்பந்தன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இலங்கையின் முதுபெரும் அரசியல் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான இரா. சம்பந்தன் தனது 91வது வயதில் காலமான செய்தி வேதனை தருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. வழக்கறிஞராக வாழ்க்கையை தொடங்கிய இரா. சம்பந்தன் அவர்கள் இலங்கையின் அரசியல் களத்தில் தமிழ் மக்களுக்காக தொடர்ந்து இயங்கியவர். இலங்கையின் அனைத்து தரப்பு மக்களின் மரியாதையை பெற்றவராக இருந்தார். 1977-ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் இயங்கியுள்ளார்.
இந்தியாவுடனும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களுடனும் சிறந்த நட்புறவு கொண்டிருந்தார். கடந்த காலத்தில் இலங்கைத் தமிழர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானபோது அதையொட்டி முக்கிய தருணங்களில் அவர் தனியாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடனும் சிபிஐ(எம்) மாநிலக் குழு அலுவலகத்திற்கு நேரில் வந்து பேசும் போது ஏராளமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இலங்கையில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் சமமான உரிமை வேண்டும் என்றும், 13 வது சட்ட திருத்தத்தை அமலாக்குவதற்கும், 2009 இறுதிக்கட்ட போருக்கு பின்னர் தமிழர் வாழும் மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரமும் சம உரிமையும் வேண்டுமெனவும் தொடர்ந்து வாதாடியும், போராடியும் வந்தார். இலங்கையில் ஜனநாயகத்திற்காகவும், தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காகவும் தொடர்ந்து உழைத்த இரா. சம்பந்தன் அவர்களின் மறைவு, ஜனநாயக சக்திகளுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தார், கட்சியினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.