சென்னை, டிச.18- அரசியலமைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட பல முக்கிய அமைப்புகளின் சுயாட்சியையும் நம்ப கத்தன்மையையும் ஒன்றிய அரசு சீர்குலைத்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் என்.ராம் கவலை தெரிவித்தார். அகில இந்திய கணக்கு தணிக்கை ஊழியர் சங்கத்தின் 50வது மாநாட்டை தொடக்கி வைத்து அவர் ஆற்றிய உரை
அரசியலமைப்பு அமைப்புகளின் முக்கியத்துவம்
“அரசியலமைப்பின் 148வது பிரிவு தலைமைகணக்கு தணிக்கை அதிகாரி பதவியை உருவாக்கியது. ஜனநாயகத்தில் நிதிக் கண்காணிப்பின்முக்கியத்துவத்தை இப்பிரிவு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் போலவே, சிஏஜியைபதவியிலிருந்து நீக்குவதற்கும் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த அரசியலமைப்பு பாதுகாப்பு இப்பதவியின் சுயாட்சிக்குஅவசியமானது.”
நிதி கண்காணிப்பின் தேவை
“ஒன்றிய-மாநில அரசுகள் ஒதுக்கப்படும் நிதியை கவனக்குறைவாகவும் பொறுப்பற்ற முறை யிலும் செலவிடும்போது, அரசு கருவூலத்திற்கு ஏற்படும் இழப்பு குறித்து சிஏஜி நாடாளுமன்றத் திற்கு அறிக்கை அளிக்கிறார். அரசுகள் இவற்றை தீவிரமாக பரிசீலித்து, எதிர்காலத்தில் தவறுகள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மய மாக்கும் முடிவுகளிலும் சிஏஜி கவனம் செலுத்த வேண்டும். தற்போது இவை பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை.”
தனிப்பட்ட அனுபவம்
“போபர்ஸ் ஊழல் விவகாரத்தில் சிஏஜி அலுவலகத்தின் பங்கை நேரில் கண்டவன் நான். மூன்றாண்டு புலனாய்வுக்குப் பிறகு இந்த ஊழ லை நாங்கள் வெளிக்கொணர்ந்தபோது, 1989இல் சிஏஜி அலுவலகமும் அதை உறுதிப் படுத்தியது. இது தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, அன்றைய காங்கிரஸ் அரசுக்கு பின்னடைவை உண்டாக்கியது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அந்த ஊழலை வெளிப்படுத்திய சிஏஜி சதுர்வேதி பின்னாளில் பாஜகவில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராகவும், கர்நாடக ஆளுநராகவும் பதவி வகித்தார். அரசியலமைப்பு பதவிகளில் இருந்த வர்கள் பிற்காலத்தில் அரசியல் பதவிகளை ஏற்பது அவர்களின் நடுநிலைமையை கேள்விக்குறியாக்கும்.”
தற்போதைய நிலைமை
“நவீன இந்தியாவில் ஊழல் மட்டுமல்ல, மதவாதம், எதேச்சதிகாரமும் பெரும் பிரச்சனை களாக உருவெடுத்துள்ளன. தாராளமயம், தனியார்மயம் அமலான பிறகு போபர்ஸ் விட பலமடங்கு ஊழல்கள் நடைபெறுகின்றன. முடிவெடுக்கும் இடங்களை கைப்பற்றி திட்டமிட்டு இவை நடத்தப்படுகின்றன. சிஏஜி அலுவலகத்தின் பணியாளர் எண்ணிக்கையும், நிதி ஒதுக்கீடும் குறைக்கப்படுவதால், இந்த அலுவலகம் திறம்பட செயல்பட முடியாத நிலை உருவாக்கப்படுகிறது.”
முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
“ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் ஊழல்களை வெளிக்கொணர வேண்டும். ஆனால் சிஏஜிஅலுவலகத்தின் செயல்பாடுகள்தான் மிக முக்கியமானவை. அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்.
சிஏஜி அலுவலகத்தின் முக்கியத்துவத்தை குறைக்கும் அரசின் முயற்சிகளை கூட்டு இயக்கங்கள் மூலம் எதிர்கொள்ள துறை ஊழி யர்களும் அதிகாரிகளும் முன்வர வேண்டும்.