சென்னை, ஜன. 7 - மின்னணு பொருட்கள் உற்பத்தி, மின்சார வாகனங்கள், உணவு பதப்படுத்தல் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை கூடுதலாக ஈர்ப்பது தொடர்பாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு கவனம் செலுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்தரங்குகள்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை யில் ஞாயிறன்று துவங்கியது. மூலதனம் நிறைந்த மின்னணு பொருட்கள் உற்பத்தி, மின்சார வாகனங்கள், உணவு பதப்படுத்துதல் போன்ற வேலைவாய்ப்பு நிறைந்த துறைகளில் முதலீடுகள் குறித்து இம்மாநாடு சிறப்புக் கவனம் செலுத்துகிறது.
உலகம் முழுவதிலும் இருந்து 150க்கும் மேற்பட்ட முன்னணி வல்லு நர்களும், தலைமையாளர்களும் பங்கேற்கும் கருத்தரங்குகள், புத்தாக்கம் தொடர்பான நிகழ்ச்சிகள், இளம் தலைவர்கள் வணிகத்தில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள், மகளிர் தலைமையாளர்களின் குழு விவரங்கள் போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.
எட்டு துறைகள் சார்ந்த பெரிய தொழிற்சாலைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்களுக்கான அரங்குகள், தமிழ்நாடு சூழ லமைப்பு அரங்கம் என்று பல்வேறு விதமான அரங்குகள் அமைக்கப்பட்டி ருக்கின்றன. மேலும், பன்னாட்டு அரங்குகளும் அமைத்துள்ளனர்.
3000 மாணவர்கள்
இந்த மாநாட்டிற்காக கல்லூரி, பல்கலைக் கழகங்களின் ஒருங்கி ணைப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்துள் ளனர். இத்துடன், புத்தொழில்களுக் கென்று ஒரு தனி மாநாடு ஏற்பாடு செய்துள்ளனர். வளர்ந்து வரும் முதலீட் டாளர்கள், இந்த துறை சார்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடினர்.
வாங்குவோர்-விற்போர் சந்திப்பு
குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார்பில் ‘வாங்குவோர்- விற்பனையாளர் சந்திப்பு’ நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்துள்ளனர். இதன் மூலமாக 20க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், 500க்கும் அதிகமான உள்நாட்டு விற்பனையாளர்கள் கலந்துரை யாடினர்.
10 ஆயிரம் காவலர்கள்
கிண்டியிலிருந்து நந்தம்பாக்கம் வரையில் 30 மீட்டர் இடைவெளியில் ஒரு காவலர் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை முழுவதும் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சாதனை பெண்மணிகளுக்கு பாராட்டு
சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய ஆதித்யா எல்.1 விண்கலம் இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த திட்ட இயக்குநர் தமிழ்நாட்டை சேர்ந்த நிகர் சாஜி, தென்காசியில் பிறந்தவர். அவரது சாதனையை பாராட்டி மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று கரவொலி எழுப்பி பாராட்டு தெரிவித்தனர்.