tamilnadu

கிளாம்பாக்கத்தில் இருந்து இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை, மார்ச் 14- “சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம் புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (மார்ச்.15) 360 பேருந்துகளும்,  சனிக்கிழமை (மார்ச்.16) 420 பேருந்துகளும் இயக்க விரைவு போக்குவரத்து கழகம்  திட்டமிடப்பட்டுள் ளது.

 மேலும், கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 70 பேருந்துகளும், சனிக்கிழமை (மார்ச்.16) 70 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள் ளது. தொடர்ந்து, பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்ட மிடப்பட்டுள்ளது. மேலும், மார்ச்.17ஆம் தேதி சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்கு வசதியாகப் பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது

. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை (மார்ச்.15) பயணம் மேற் கொள்வதற்கு இதுவரை 4,519 பயணிகளும், சனிக்கிழமை (மார்ச்.16) 1,710 பயணிகள் மற்றும் ஞாயிறன்று (மார்ச்.17) 4,142 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும், அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்க ளது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலை யங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற் கூறிய வசதியினைப் பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்கு நர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.