சென்னை, மார்ச் 8- கிரெடாய் அமைப்பின் சார்பில் சென்னை யில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தென்னிந் தியாவில் மிகப்பெரிய வீட்டுவசதி கண்காட்சி யான “பேர்ப்ரோ 2024” வெள்ளிக்கிழமை (மார்ச் 8) துவங்கியது.
ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற வுள்ள இந்தகண்காட்சியை திரைக்கலை ஞர்கள் சுஹாசினி மணிரத்னம், பிரியா பவானி சங்கர் ஆகியோர் துவக்கி வைத்தனர். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத் தில் நடைபெறும் இந்த கண்காட்சியில் 3.25 கோடி சதுர அடி குடியிருப்புகள், 2.5 லட்சம் சதுர அடி வணிக இடங்கள், 325 ஏக்கர் மனைகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தங்களின் வசதிக்கேற்ற வீடுகளை வாங்கு வோருக்காக இந்த ஆண்டு கண்காட்சியில் 75க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் வீடுகள் ரூ.15 லட்சம் முதல் 15 கோடி ரூபாய் வரை இடம் பெற்றுள்ளன.
துவக்க நிகழ்ச்சியில் கிரெடாய் முன்னாள் தலைவர்கள் சுரேஷ் கிருஷ்ணன், ஹபீப் மற்றும் பதம் துகர், தற்போதைய தலைவர் சிவகுருநாதன், எஸ்பிஐ தலைமைப் பொது மேலாளர் ரவி ரஞ்சன், கண்காட்சி ஒருங்கி ணைப்பாளர் அஸ்லம் பாக்கீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.