அரக்கோணத்தில் அதிநவீன ரயில்வே சரக்கு முனையம்
சென்னை, ஜூன் 29- அரக்கோணத்தில் புதிதாக அதிநவீன ரயில்வே சரக்கு முனையம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
சரக்கு ரயில் சேவையின் உள்கட்டமைப்பை மேம்படுத் தும் வகையில் கதி சக்தி பன்னடுக்கு சரக்கு முனையும் திட்டத்தின் கீழ் முக்கிய ரயில் நிலையங்களில் சரக்கு முனை யம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சுமார் 1 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ரயில்வே சரக்கு முனையம் அமைக்கப் பட உள்ளது.
இதற்காக ஜேஎஸ்டபிள்யூ இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக அமைய உள்ள இந்த சரக்கு முனையத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் நிற்பதற்கான வசதி சரக்குகளை கையாளுவதற்கான தளங்கள், நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்ட சாலை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
இந்த முனையத்தில் ஆண்டிற்கு சுமார் 10 லட்சம் டன் சரக்குகள் கையாளக்கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த முனையம் பயன்பாட்டிற்கு வரும்போது திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும். இதன் மூலம் இந்த பகுதியின் பொருளாதார மும் முன்னேற்றம் அடையும். இந்த திட்டத்திற்கு தனியார் நிறுவனம் சுமார் ரூ.50 கோடி வரை முதலீடு செய்ய உள்ளது. இந்த கட்டமைப்பு களை கையாள அந்த நிறுவனத்திற்கு 35 ஆண்டுகள் ஒப்பந்தம் காலம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வார இறுதியில் அதிகரித்த தங்கம் விலை
சென்னை,ஜூன் 29- சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் இருந்து ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. சனிக்கிழமையன்று ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,685-க்கும் சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,480-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.94.50-க்கும் பார் வெள்ளி ரூ.94,500-க்கும் விற்பனையா கிறது.
அடுக்கு மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
சென்னை,ஜூன் 29- சென்னை அம்பத்தூர் கதிர்மேடு விநாயகர் கோவில் தெருவில் அடுக்கு மாடி கட்டிடத்தில் இயங்கி வரும் வாசனை திரவியங் கள் தயாரிக்கும் குடோன் மற்றும் அலுவலகத்தில் சனிக்கிழமையன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மாதவரம், கொளத் தூர் மற்றும் அம்பத்தூர் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
காதல் தகராறில் தனியார் நிறுவன ஊழியர் கொலை: பாஜக பிரமுகர் மகன் கைது
சென்னை, ஜூன் 29- திருவான்மியூர், லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அரிஹரன் (34). இவர், துரைப்பாக்கம் சக்திநகர் பகுதியில் உள்ள ஒரு இணையத்தள வடிவமைப்பு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதே நிறுவனத்தில் புதுச்சேரி பாரதிநகரைச் சேர்ந்த ஆ.தரணிதரன் (34) என்பவரும் வேலை செய்து வந்தார். தரணிதரனின் தந்தை ஆரோக்கியசாமி (எ) துரை கணேசன்,பாஜக மாநில துணைத் தலைவராக உள்ளார். மேலும் அவர் ரியல் எஸ்டேட் நிறுவனமும் நடத்தி வருகிறார்.
தரணிதரனும், ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டின் காரணமாக தரணிதரனை விட்டு அந்த பெண் பிரிந்தார். தரணிதரனை விட்டு பிரிந்த அந்த பெண்ணும், அரிஹரனும் காதலித்து வந்தனராம். இது தொடர்பாக அரிஹரனுக் கும், தரணிதரனுக்கும் இடையே விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் அரிஹரனுக்கும், தரணி தரனுக்கும் இடையே வெள்ளிக்கிழமை இரவு அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே தரணி தரன், அரிஹரனை பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்தக் காயமடைந்த அரிஹரன் மயங்கி கீழே விழுந்தார். மேலும் அவர், சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் இறந்தார்.
இதைப் பார்த்த தரணிதரன் அங்கிருந்து தப்பியோடினார். இது குறித்து தகவலறிந்த துரைப்பாக்கம் காவல் துறையினரசம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அரிஹரன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தப்பி யோடிய தரணிதரனை உடனடியாக கைது செய்தனர்.