tamilnadu

ஆன்லைன் சூதாட்டத்தால் மகனை கொன்று தற்கொலைக்கு முயன்ற விமானப்படை ஊழியர்

சென்னை,ஜன.8- ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சைதன்யா (33) என்பவர், சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் சமையல்காரராக வேலை செய்து வருகிறார்.  

சேலையூர் அருகே உள்ள மாடம்  பாக்கம் பார்வதி நகர் மெயின் ரோட்டில் உள்ள அடுக்கு மாடி  குடியிருப்பில் வசித்து வருகிறார்.  இவர் தனது மூத்த மகன் பத்ரி யின் (8) கழுத்தை நெரித்து தூக்கில்  தொங்கவிட்டு கொலை செய்துள் ளார். பின்னர் வீட்டை விட்டு வெளி யேறிய அவர், தற்கொலை செய்து  கொள்வதற்காக மெரினா கடற் கரைக்கு சென்றார்.

மற்றொரு அறை யில் இளைய மகன் கவுசிக்குடன் (4) தூங்கிக் கொண்டிருந்த மனைவி  வைதேகிக்கு இது தெரியாது. மெரினாவுக்கு சென்ற சைதன்யா, அங்கிருந்து செல்போ னில் தனது நண்பரை தொடர்பு கொண்டு, ‘என் மகனை கொன்று விட்டேன். நானும் சாகப் போகி றேன். என் மனைவிக்கு உதவி செய்யுங்கள்’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நண்பர், இதுபற்றி சேலையூர் காவல்  நிலையத்திற்கு தகவல் கொடுத் துள்ளார். மேலும் மெரினா கடற்கரை யில் உள்ள ரோந்து காவல் பிரிவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மெரினா கடற்கரை காவலர்கள் சைதன்யாவை கண்டுபிடித்து மீட்டனர். இதற்கிடையில், சேலையூர் காவல் துறையினர் சைதன்யாவின் வீட்டுக்கு சென்று அவரது மனைவி வைதேகியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தான் நடந்த சம்பவம் வைதேகிக்கு தெரிய வந்தது. பிறகு, பிணமாக தொங்கிய  சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, காவல்துறையி னர் மேற்கொண்ட விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக அளவில் பணத்தை இழந்ததாகவும் அதனால் பலரிடம் கடன் வாங்கிய தாகவும் கூறியுள்ளார்.

கடன் கொடுத் தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தால் தனது சொத்துக்கள் முழுவதையும் விற்று, கடனை அடைக்க முடியவில்லை. மாதம் ரூ.42 ஆயிரம் சம்பளம் வாங்கும் சைதன்யாவுக்கு மாதம் திருப்பி செலுத்த வேண்டிய கடன் தொகை மட்டும் ரூ.50 ஆயிரம் இருந்ததாக கூறப்படுகிறது.

கடன் தொல்லை காரணமாக பணிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்து  விட்டு சொந்த ஊருக்கு சென்ற சைதன்யா, நீண்ட நாட்களுக்கு பிறகு  கடந்த 20 ஆம் தேதி மீண்டும் சேலை யூர் வந்துள்ளார். கடன் கொடுத்த வர்கள் பணத்தை கேட்டு தொல்லை  கொடுத்ததால் தற்கொலைக்கு முயற்சித்ததும் தெரிய வந்தது. மேலும் சைதன்யா எழுதி வைத்தி ருந்த கடிதம் சிக்கியது. ஆன்லைன் சூதாட்டத்தால் குடும்பமே நிலை குலைந்துள்ளது.