tamilnadu

img

சிறு விளையாட்டு அரங்கம்: உதயநிதி திறந்து வைத்தார்

சிறு விளையாட்டு அரங்கம்: உதயநிதி திறந்து வைத்தார்

சென்னை, சேப்பாக்கம் - திரு வல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 'முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம்' கட்டப் பட்டுள்ளது. 4.068 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப் பட்டுள்ள விளையாட்ட ரங்கத்தில் 396 சதுர மீட்டர் பரப்பளவில் வரவேற்பு பகுதி, ஆண்கள் மற்றும் பெண்க ளுக்கு தனித்தனியே உடை மாற்றும் அறைகள், கழிப்பறைகள், பொருட் கள் வைப்பறை, மேலாளர் அறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும், விளையாட்டரங்கத்தில் திறந்தவெளி பார்வையாளர் மாடம் 265 நபர்கள் அமரும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு அரங்கத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாநகராட்சி நிலைக்குழு தலைவர் நே.சிற்றரசு, விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலை மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்ட பலர் உடன்  இருந்தனர். இதன் பின்னர், துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தி யாளர்களை சந்தித்து கூறுகையில், ‘முதலமைச்சர் உத்தரவுப்படி ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் தொகுதிகளிலும் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என கடந்த 2022-2023 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டது. அதன்படி சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் 3 கோடி ரூபாய் மதிப்பில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் 3 கோடி ரூபாயில் கட்டுப்பட்டுள்ள முதல மைச்சர் சிறு விளையிட்டு அரங்கத்தை திறந்து வைத்துள்ளோம். மொத்த மாக இன்று 12 கோடி ரூபாய் மதிப்பி லான முதலமைச்சர் சிறு விளை யாட்டு அரங்கங்கள் திறந்து வைக்கப் பட்டுள்ளன. எனது சேப்பாக்கம் - திரு வல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 2 கோடியே 50 லட்சம் ரூபாய் தமிழக விளையாட்டுத்துறை சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது.