tamilnadu

 அதிமுகவில் ஒற்றைத்தலைமை வலியுறுத்தி கோஷம்

 சென்னை, ஜூன் 14    அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் நடை பெற்ற ஆலோசனை கூட்டம் செவ்வா யன்று  நிறைவு பெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ெஜயக்கு மார்,அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. அ.தி.மு.க. வுக்கு ஒற்றைத் தலைமை தான் தேவை என பெரும்பாலான நிர்வாகிகள் வலியு றுத்தினர் என்றார். அ.தி.மு.க. தொண்டர்களும் சரி, நிர்வாகிகளும் சரி இப்போது எதிர் பார்ப்பது ஒற்றை தலைமை தான். ஒற்றை தலைமை யார் என்பதை கட்சி தான் முடிவு செய்யும். ஒற்றை தலை மைக்கான விடையை கட்சி தான் அறிவிக்கும் என அவர் தெரிவித்தார்.