tamilnadu

img

சிறுதாவூர் நிலப் போராளி தோழர் கே.மனோகரன் மறைவு

சிறுதாவூர் நிலப் போராளி  தோழர் கே.மனோகரன் மறைவு 

செங்கல்பட்டு, மே 4- செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர்-திருக்கழுக்குன்றம் தாலுகாவில்,மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் கே. மனோகரன் இயற்கை எய்தினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட மூத்த தோழர் கே.மனோகரன் (வயது 63)  ஹிமாச்சல பிரதேசம், கன்கராவில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒருமாத காலமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.  ஞாயிறன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தோழர் கே.மனோகரன் சென்னை. திரு வல்லிக்கேணி, மாட்டாங்குப்பம் பகுதியில் 1980ம் ஆண்டு  இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம்  உதயமானபோது தன்னை அதில் இணைத்துக் கொண்டு அப்பகுதியில் ஒரு கிளையை உருவாக்கி செயல்பட்டு வந்தார். 1982ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.  சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர். 1985-86 காலகட்டத்தில் ஒன்றுபட்ட செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் குடி பெயர்ந்தார். தையல் தொழிலாளியாக தனது வாழ்க்கையை துவங்கி, அப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், வர்க்க, வெகுஜன அமைப்புகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்று, முன்னணி தலைவராக செயல்பட்டு வந்தார். ஒன்றுபட்ட மாவட்டத்தில் செங்கல்பட்டு வட்டக்குழு மற்றும் மாவட்டக்குழு உறுப்பினராகவும், பின்னர் திருப்போரூர்-திருக்கழுக்குன்றம் வட்டக்குழு உருவானபோது அதன் முதல் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டு திறம்பட செயல்பட்டவர். கட்சியின் முழுநேர ஊழியராகவும், ஒன்றுபட்ட மாவட்டத்தில் சிஐடியுவின் மாவட்ட நிர்வாகியாக, மாநிலக்குழு உறுப்பினராக, கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஒன்றுபட்ட மாவட்ட செயலாளராக, மாநில நிர்வாகியாகவும் பணி யாற்றியவர். திருப்போரூர் ஒன்றியம், சிறுதாவூரில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட நிலம் அப கரிக்கப்பட்டதை கண்டறிந்து, நிலத்தை மீட்ப தற்கான போராட்டத்தை முன்னெடுத்தவர். தான் வாழ்ந்த தண்டலம் ஊராட்சிக்கு முதன் முதலாக குழாய் மூலம் குடிநீர் வழங்க போராடி வெற்றி கண்டவர். தண்டலம் ஊராட்சிமன்ற தேர்தல் (1996 - 2001) ஊராட்சி தலை வர் பொறுப்புக்கு 2 முறை போட்டி யிட்டார். ஆதிக்க சாதியினரின் அச்சு றுத்தல்களை எதிர்த்து போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் வாய்ப்பை இழந்தார். தண்டலம் ஊராட்சியில் அரசு துவக்கப் பள்ளியை உருவாக்கிட கிராமத்தினர் உதவியோடு, கோயில் நிலத்தை குத்த கைக்கு எடுத்து அரசு துவக்கப் பள்ளியை உரு வாக்கியவர். பையனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மக்கள் பணம் கொள்ளை யடிக்கப்பட்டதை எதிர்த்துப் போராடி ரூ.40 லட்சம் அளவிற்கு பணத்தை மீண்டும் உரிய மக்களுக்கு கிடைக்கச் செய்தவர். மடையத்தூர் ஏரியில் மண் அள்ளுவதை நெஞ்சுரத்தோடு எதிர்த்து மக்களைத் திரட்டி தடுத்து நிறுத்தியவர். 2008-ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், கட்சிப் பணிகளில் அர்ப்பணித்துக் கொண்டு தொடர்ச்சியாக 45 ஆண்டு காலம் பணியாற்றிவர். இவரது இளைய சகோதரர் கே.லிங்கன் கட்சியின் திருப்போரூர் வட்டக்குழு உறுப்பினராகவும், மாற்றுத் திறனாளி கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகியாகவும் பணி யாற்றி வருகிறார். இதுமட்டுமின்றி மேலும் இரு மூத்த சகோதரர்களும் கட்சியோடு இணைந்த குடும்பமாக வாழ்க்கையை தொடர்கின்றனர். மறைந்த தோழர் கே.மனோகரனுக்கு கட்சி யின் செங்கல்பட்டு மாவட்டக்குழு சார்பாக செவ்வணக்கத்தை, அஞ்சலியை உரித்தாக்கி கொள்கிறோம் என்று கட்சியின் மாவட்ட பொறுப்பு செயலாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.   தோழர் மனோகரனுக்கு மனைவி எம்.சாந்தா, மகள் மருத்துவர் எம்.ஜோதி உள்ளிட்டோர் உள்ளனர். அவரதுமறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும்  உறவினர்கள் கட்சித்தோழர்கள்  அனைவருக்கும் கட்சியின் மாவட்டக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இன்று இறுதி நிகழ்ச்சி  திங்களன்று (மே 5) மாலை அவரது உடல் திருப்போரூர், மேட்டுத் தண்டலம். பாரதி நகரில் உள்ள அவரது சகோதரர் தோழர் கே.லிங்கன் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் இறுதி நிகழ்ச்சிகள் நடை பெறும் என செல்வம் தெரிவித்துள்ளார்.