அயனாவரம் மார்க்கெட் பள்ளி அருகே உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற கோரி ஞாயிறன்று (ஜூன் 9) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சி 98ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.மிருதுளா, வாலிபர் சங்க வில்லவாக்கம் பகுதி தலைவர் டேவிட், செயலாளர் யூஜின் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.