சென்னை, அக். 14 - சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்து வப் படிப்புகளுக்கான கலந் தாய்வு, மழை காரணமாக அக்டோபர் 21-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு 2024-25ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு http://www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறையின் இணையதளத்தில் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி நிறைவடைந்தது.
இதன்படி, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 4,558 பேரும், 7.5 விழுக்காடு இடங்களுக்கு 1,321பேரும், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,460 பேரும், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 1,428 பேரும் என மொத்தம் 8,797 மாணவர்கள் விண்ணப்பித்துள் ளனர்.
இதன்படி, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 4,558 பேரும், 7.5 விழுக்காடு இடங்களுக்கு 1,321பேரும், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,460 பேரும், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 1,428 பேரும் என மொத்தம் 8,797 மாணவர்கள் விண்ணப்பித்துள் ளனர்.
அதைத்தொடர்ந்து, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமி யோபதி மருத்துவப் படிப்பு களுக்கான கலந்தாய்வு அக்டோ பர் 21-ஆம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவமனை வளாகத்தில் தொடங்குகிறது.
முதல் 3 இடங்கள்
இந்த தரவரிசைப் பட்டிய லில் முதல் மூன்று இடங்களை மாணவிகளே பிடித்துள்ளனர். நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 653 மதிப்பெண் பெற்ற ஹர்ஷினி ஜோதி முதல் இடத்தையும், 633 மதிப்பெண் பெற்ற தீப்தி 2-வது இடத்தையும், 628 மதிப் பெண்கள் பெற்ற பிரவீணா 3-ஆவது இடத்தையும் பிடித்துள் ளனர்.
மேலும் இந்த தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங் களில் 8 பேர் மாணவிகள். இருவர் மட்டுமே மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டிற்கு 521 மதிப்பெண் பெற்ற தர்ஷினி முதல் இடத்தையும், 510 மதிப் பெண் பெற்று மதுமிதா 2வது இடத்தையும், 518 மதிப்பெண் பெற்ற சுபா 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.