கேரள மாநிலம் விழிஞ் ஞம் கடற்கரைப் பகுதியில் 300 கிலோ போதைப் பொருட் கள் மற்றும் ஆயுதங் களைக் கடத்திய குற்றச்சாட் டில் ஆதிலிங்கம் என்பவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் கைது செய்யப்பட்டார்.
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய தலைவ ரான குணசேகரனுடன் ஆதி லிங்கம் தொடர்பில்இருந்தது தெரியவந்தது.
ஆதிலிங்கம், சரத்குமாரின் மகளும் - நடிகையுமான வர லட்சுமியின் முன்னாள் உதவி யாளர் என்பதும், போதைப் பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை சினிமாவில் ஆதி லிங்கம் முதலீடு செய்திருப்ப தும் என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில், ஆதி லிங்கம் குறித்த தகவல்களை திரட்டும் வகையில், விசார ணைக்கு நேரில் ஆஜராகுமாறு சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமிக்கு தேசிய புல னாய்வு முகமை (NIA) சம்மன் அனுப்பியதாகவும், இந்தப் பின்னணியிலேயே போதைப் பொருள் கடத்தல் தொடர்பான அந்த வழக்கைக் காட்டி, பாஜக வினர் மிரட்டியதால், இரவோடு இரவாக முடிவெடுத்து, சில மணி நேரங்களில், சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்து பாஜகவில் இணைத்து விட்டதாக சமூகவலைதளங்க ளில் தகவல்கள் பரவின.
ஆனால் “இப்படி ஒரு சம் மனை என்ஐஏ தமக்கு அனுப்ப வில்லை என நடிகை வரலட்சுமி மறுத்துள்ளார். ஆதிலிங்கம் என்பவர் 3 ஆண்டுகள் மட்டும் ப்ரீலேன்ஸ் மேலாளராக பணி புரிந்தார். அதன் பின்னர் எனக்கும் ஆதிலிங்கத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. எனக்கும் ஆதிலிங்கம் கைது செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி யாக இருந்தது. தேவைப்பட் டால் அரசுக்கு ஒத்துழைப்பதில் எனக்கும் மகிழ்ச்சிதான்!” என்று நடிகை வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.