tamilnadu

img

மணிப்பூரில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை

மணிப்பூரில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், தேவலயங்கள் இடித்ததைக் கண்டித்தும், கிறித்துவ  மக்கள் மீது நடைபெறும் தாக்குதலைக் கண்டித்தும் அதற்கு துணை போகும் பாஜக அரசை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ராயபுரம் பகுதிக் குழு சார்பில் புதனன்று (ஜூலை 26) பகுதிச் செயலாளர் நீதிதேவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேராசிரியர் இரா.காளிஸ்வரன், மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணதமிழன்,  மாவட்டப் பொருளாளர் விஜய், மாவட்ட துணைத் தலைவர் முருகேசன், கிறிஸ்தவ சபை போதகர்கள் லாசர், சவுந்தரராஜன், டேவிட், சாலமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.