tamilnadu

img

தொடர் கொலை மிரட்டல்.. காவல்துறை பாதுகாப்பு கேட்கும் பெண் ஊராட்சி மன்றத் தலைவர்...

சென்னை:
தொடர் மிரட்டல் காரணமாக காவல்துறை பாதுகாப்பு கோரி பட்டியலினத்தைச் சேர்ந்த ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் அமிர்தம். பட்டியலினத் தைச் சேர்ந்த இவர் பதவியேற்றது முதல், ஊராட்சி மன்ற செயலாளர் சசிக்குமார் மதிப்பதில்லை. ஆவணங்களையும் முறையாக சமர்ப் பிப்பது கிடையாது. இதுகுறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன.

அதேபோல் துணைத்தலைவர் ரேவதியின் கணவர் விஜயகுமார் மற்றும் முன்னாள் தலைவர் ஹரிதாஸ் ஆகியோரின் தொடர் மிரட்டலுக்கும் அமிர்தம் ஆளாகியுள் ளார். இதன் வெளிப்பாடாக சுதந் திர தின கொடியேற்று விழாவில் அமிர்தத்தை தேசியக்கொடி ஏற்றவிடாமல் இந்த மூவரும் தடுத்தனர். தேசியக் கொடியேற்றவிடாமல் தடுத்த விவகாரத்தை மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசின் கவனத்திற்கும்கொண்டு சென்றது மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி. அதனைத்தொடர்ந்து, அதிகாரிகள், ஆட்சியர் ஆய்வு செய்து தலித் பெண் தலைவர் அமிர்தம் தேசியக்கொடி ஏற்றிட நடவடிக்கை எடுத்தனர்.இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சிமன்ற செயலாளர் மற்றும்துணைத் தலைவரின் கணவர்ஆகிய இருவரும் அமிர்தத்தை தலைவர் நாற்காலியில் அமர் வதை தடுப்பது, சாதிப்பெயரை குறிப்பிட்டு அழைப்பது, செலவுஆவணங்களை தராமல் மறைப் பது, துணைத் தலைவரின் கணவர் மூலம் ஆவணங்கள் கையாளப்படுவது போன்ற அடாவடிச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

தன் மீதான கொடுமைகள் குறித்து காவல் நிலையத்தில் அமிர்தம் அளித்த புகாரில், ஹரிதாஸ், விஜயகுமார், சசிக்குமார் ஆகியோர் மீதுவன்கொடுமை தடுப்புச் சட்டம் உள் ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின், மூவரும் நீதிமன்றத்தில் சரணடைந்து, பிணை பெற்றனர்.இந்நிலையில் தனக்கு மீண் டும் மிரட்டல்கள் வருவதால் காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரிஅமிர்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், 1997 ஆம் ஆண்டு முதல்2014 ஆம் ஆண்டு வரை பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பல ஊராட்சி மன்றத்தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதால், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.மனுவை விசாரித்த நீதிபதி ரவீந்திரன், 2 வாரங்களில் விளக்கமளிக்கும்படி, தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.