tamilnadu

img

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 8 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
கடந்த ஜூலை 14-ஆம் தேதி சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். உடல் நல குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். 
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அங்கு சிகிச்சை முடிந்த பிறகு ஜூலை 17-ஆம் தேதி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். 
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், அவரது நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 8 தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.