tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

மூத்த தோழர் தயாநிதி காலமானார்

கடலூர் மாநகரம் செல்லங்குப்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் கா.தயாநிதி காலமானார். அவருக்கு வயது 70 அவருடைய உடல் செல்லங்குப்பத்திலுள்ள இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தோழர் தயாநிதி உடலுக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்பராயன், பி. கருப்பையன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். செல்லங்குப்பம் மயானத்தில்  இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.

மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள் கள்ளக்குறிச்சி

, ஏப்.16 - கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்கூர்  ஆதிதிராவிட அரசு ஆரம்ப பள்ளியில்10க்கும் மேற்பட்ட மாணவர்கள் 1ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக புதிதாகச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு மாலை அணிவித்து மேளத்தாளங்களுடன்  ரதத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர் அப்பொழுது கல்வியின் அவசியம் குறித்து முழக்கமிட்டபடி பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளிக்கு தேவையான உபகரணங்களை சீர்வரிசையாக எடுத்து வந்த பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர்.

கல்லூரி மாணவர்களுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு

கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் பெரியார் கலைக்கல்லூரி ஆண்டு விழாவில் கல்லூரி அளவில் பல்வேறு துறைகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் புத்தகம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பெரியார் கலைக்கல்லூரி முதல்வர் இராஜேந்திரன், பேராசிரியர்கள் சாந்தி, இராஜேந்திரன், ஜானகிராஜா உள்பட  மாணவ மாணவியர் பலர் கலந்துகொண்டனர்.

கார் ஏற்றிக்கொன்ற நபர் கைது  

செங்கல்பட்டு, ஏப்.16- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றி யத்திற்குட்பட்ட மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சரத்பாபு இவர் தமிழ்நாடு மின்சார வாரி யத்தில் ஒப்பந்ததாரராக பணி புரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த செங்கல்பட்டு மருத்துவ மனையில் அமரர் உறுதி ஓட்டும் ஒப்பந்த ஊழியர் சிவராஜ் என்ப வருக்கு சரத்பாபு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 4 லட்சம் கடன் கொடுத்துள்ளார். இதனை திருப்பி கேட்ட சரத்பாபுக்கும் சிவராஜிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் சரத்பாபு அவர் வீட்டு அருகே சாலையில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது மது போதையில் கார் ஓட்டி வந்த சிவராஜ் அமர்ந்திருந்த சரத்பாபு மீது வேக மாக காரை மோதி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த சரத்பாபு அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர் போகும் வழியில் உயிரிழந்துள்ளார். உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைத்து விட்டு கொலை செய்த சிவராஜ் கைது செய்தும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தும் படாளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடுக்கல் வாங்கல் விவ காரத்தில் ஏற்பட்ட விரோதம் காரணமாக பணம் கொடுத்த வரைய கார் ஏற்றி கொலை செய்துள்ளது. கிராமத்தில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.