tamilnadu

img

புத்தக கண்காட்சியில் கருத்தரங்கம்

தி.மலை,அக்.13- திருவண்ணாமலையில் 3 ஆவது புத்தக கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை யன்று (அக்.11) துவங்கியது. மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் புத்தக திருவிழா 3 ஆம் நாள் நிகழ்ச்சியில்,சிவப்பு யானை நாடகக் குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.மாவட்ட கல்வி அலுவலர் ந.வெங்கட்ராமன் தலைமை யில் நடைபெற்ற கருத்தரங்க த்தில், பள்ளி துணை ஆய்வாளர் குணசேகரன் வர வேற்றார், மனிதனை நெய்யும் நூல் என்ற தலைப்பில் பாரதி கிருஷ்ண குமார் சிறப்புரையாற்றினார், திருவண்ணாமலை ஜே.கே.எஸ் அக்ரோ மார்க்கெட் ஜெயகாந்தன் வாழ்த்துரை வழங்கினார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏ.முருகன் நன்றி கூறினார்.

;