tamilnadu

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குக!

சென்னை, மார்ச் 4- சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி, தமிழார்வலர்கள் நடத்தும்  உண்ணாநிலைப் போராட்டத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமுஎகச மாநி லத் தலைவர் மதுக்கூர் இராம லிங்கம், பொதுச்செயலாளர் ஆத வன் தீட்சண்யா ஆகியோர் தங்க ளின் அறிக்கையில் குறிப்பிட்டி ருப்பதாவது:

குடிமக்கள் தமது நீதிமன்றச் செயல்பாடுகள் தங்களது மொழி யிலேயே நடக்க வேண்டும் என்று  கோருவதற்கான உரிமையுடைய வர்கள். இதனாலேயே அரசியல மைப்புச் சட்டத்தின் 348(2)ஆம் பிரி வினை பயன்படுத்தி ராஜஸ்தான்,  அலகாபாத், மத்தியப்பிரதேசம், பாட்னா ஆகிய உயர்நீதிமன்றங்க ளில் வழக்காடும் மொழியாக அரை  நூற்றாண்டுக்கும் முன்பே இந்தி அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்னை  உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்னும் தமிழ்நாட்டவ ரின் நெடுநாளைய கோரிக்கை நிறைவேற்றப்படாமல் கிடப்பிலே போடப்பட்டுள்ளது.

1994 ஏப்ரல் 24 அன்று சென்னை யில் “தமிழ் வளர்ச்சி – பண்பாட்டுப் பாதுகாப்பு” மாநாட்டினை நடத்தி  இக்கோரிக்கையை முதன்மைப்  படுத்திய தமுஎகச தொடர்ந்தும்  வலியுறுத்தி வருகிறது. வழக்கறி ஞர்களின் பல்வேறு அமைப்பு களின் கோரிக்கையாகவும் இது இருந்து வருகிறது. 

சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறி விக்க வேண்டும் என்று ஒன்றிய அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தற்போதைய தமிழ்நாடு முதல மைச்சர் உச்சநீதிமன்ற நீதிபதியு டன் பங்கேற்ற பல நிகழ்வுகளில் நேரடியாகவே இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

ஆனாலும் ஒன்றிய அரசும் உச்ச  நீதிமன்றமும் இவ்விசயத்தில் முடி வெடுக்க மறுத்துவரும் நிலையில்  வழக்கறிஞர்களும் தமிழார்வலர் களுமாக 24 தோழர்கள் சென்னை யில் 28.02.2024 முதல் காலவரை யற்ற உண்ணாநிலைப் போராட் டத்தை மேற்கொண்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை  அறிவிக்கவேண்டும் என்பதில் பற்றுறுதி கொண்ட தமுஎகச இப்  போராட்டத்திற்கு தனது ஆதரவி னையும் ஒருமைப்பாட்டையும் தெரி வித்துக் கொள்கிறது. 

வாராவாரம் தமிழ்நாட்டுக்கு வந்துபோகும் பிரதமர் தமிழ்மொழி,  தமிழர் நலன், தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றில் தனக்கு  அக்கறை இருப்பதாக வாய்ப்பந் தல் போடுவதை விடுத்து உடனடி யாக தமிழை சென்னை உயர் நீதி மன்றத்தின் வழக்காடு மொழி யாக்குவதற்குரிய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தமு எகச வலியுறுத்துகிறது. 

இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டு உள்ளது.