tamilnadu

img

குண்டும் குழியுமான மாநகராட்சி சாலையில் நாற்று நட்ட மாதர் சங்கம்

சென்னை,செப்.29- சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4-வது வட்டம் மகாலஷ்மி நகரில் இருந்து மணலி எக்ஸ்பிரஸ் இணைப்புச் சாலை வரை கடந்த 10 ஆண்டுகளாக சீர்படுத்த ப்படாமல்  உள்ளது. இதனால் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கி றது. மேலும் மழைக் காலங்களில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கி றது. சாலையில் நடந்து செல்லவே அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். சாலையை சீரமைக்கக் கோரி பல முறை துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கோ ரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.  இதனைத் தொடர்ந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்  மகாலஷ்மி நகர் கிளை சார்பில் நாற்றுநடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர்,  வெள்ளியன்று (செப் 27) காலை அப்பகுதி பெண்கள் சாலையில் இருக்கும் சகதியில்  நாற்று நட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.  இதனைத் தொடர்ந்து காவல்துறை உதவி ஆணை யர் உக்கிரபாண்டி, ஆய்வா ளர் புகழேந்தி, மாநகராட்சி செயற் பொறியாளர் வேலுச்சாமி ஆகியோர் மாதர் சங்க தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து சாலையை  மாநக ராட்சி கையகப் படுத்தி தரமான தார்ச் சாலையாக அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. செயற் பொறியாளர் உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்தப் போராட்டத்தில் அனைத்திந்திய மாதர்சங்க மாவட்டச் செயலாளர் பாக்கியம், திருவொற்றியூர் மாதர் சங்க பொறுப்பாளர் புஷ்பா, நிர்வாகிகள் இந்திரா சுகுணா,  வெங்கட்டையா,  சிபிஎம் பகுதிச் செயலாளர் கதிர்வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.