சென்னை, செப்.20- நடிகைகளை தவறாக விமர்சித்த விவ காரம் குறித்து திரைக்கலைஞர் ரோகிணி அளித்த புகாரால் மருத்துவர் காந்தராஜ் மன்னிப்புக் கோரியுள்ளார்.
கேரளாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சி யை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தமிழிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நடந்திருப்பதாக நடிகை ராதிகா உள்ளிட்ட சிலர் கூறினர். இது தொடர்பாக, யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த மருத்து வர் காந்தராஜ், படத்தில் நடிக்கும்போது அனைத்துக்கும் ஓகே சொல்லிவிட்டு, 30 ஆண்டுகளுக்கு பிறகு புகாரளிப்பதாக நடிகைகளை விமர்சித்தார்.
மேலும் நடிகைகள் சிலரது பெயரை யும் குறிப்பிட்டு பேசியிருந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி நடிகையும், நடிகர் சங்கத்தின் விசாகா கமிட்டி தலைவருமான ரோகிணி சென்னை காவல் ஆணையரகத்தில், ஆன்லைன் வழியாக புகாரளித்தார்.
இந்நிலையில், மருத்துவர் காந்தராஜ் மன்னிப்புக்கேட்டுள்ளார். “தனியார் தொலைக்காட்சியில் திரைப்பட நடிகை கள் குறித்து நான் கொடுத்த பேட்டி, பல நடிகையர் மனதைப் புண்படுத்தி இருக்கிறது என்பதை அறிகிறேன். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. இருப்பினும் இந்தப் பேட்டி கொடுத்ததற்காக வருத்தம் தெரிவிக் கிறேன். உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று மருத்துவர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.