கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசனின் பணிகளை விவரிக்கிற ‘மக்கள் ஊழியன்’ என்ற ஆவணப்படத்தை காம்ரேட் டாக்கீஸ் உருவாக்கியுள்ளது. அதனை திரைக் கலைஞரும் மக்கள் நீதி மைய தலைவருமான கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஞாயிறன்று மாலை வெளியிட்டார்.
அந்த செய்தியில்,“மக்களை நேசிப்பவர்களிடம் அரசியல் அதிகாரமும் கிடைத்தால் இன்னும் அழுத்தமாய் நற்காரியங்களைச் செய்யலாம். மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினராக தோழர் சு. வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன்” என்று குறிப்பிட்டார். இந்த ஆவணப்படம் காம்ரேட் டாக்கீஸ் யூடியூப் சேனலில் வெளியானது. ஞாயிறன்று இரவு மதுரை போக்குவரத்து ஊழியர் அரங்கத்தில் நடைபெற்ற திரையிடல் நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
அவர் பேசும்போது, “இந்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ள பணிகள் ஒருசிலவே என்றாலும், நேர்த்தியாக படமாக்கி நிறைவாக கொடுத்துள்ளனர். வெறும் பேட்டிகளின் தொகுப்பாக இல்லை. இதற்காக உழைத்த காம்ரேட் டாக்கீஸ் குழுவினரை வெகுவாக பாராட்டுகிறேன் “ என்றார்.
திரையிடலின் முடிவில் ஆவணப்பட இயக்குனர் காமாட்சி ராமன், ஒளிப்பதிவாளர் நா.அசோக், இசை கலைஞர் ஆர்.ஜே.பிரசாத், மாநிலக் குழு உறுப்பினர் இரா.சிந்தன் (எழுத்தாக்கம்) கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் சு.வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், க.சுவாமிநாதன், இரா.சுதிர் உள்ளிட்டோர் பங்கெடுத்தனர்.
மக்கள் ஊழி யன் - ஆவ ணப்படம்
மொத்தம் 29 மணி நேர காட்சித் தொகுப்பு, ஒன் றரை வருட படப் பிடிப்பு,பல மனிதர்களின் நீண்ட பேட்டிகள்,3 மாத எடிட்டிங், இவை அனைத்தையும் பொறுமையுடன் கையாண்டு 30 நிமிடங்களுக்குள் அடக்கியுள்ளார். இயக்குநர் காமாட்சிராமன். அவரது அர்ப்ப ணிப்புடன் கூடிய உழைப்பின் விளைச்சலே இந்த ஆவணப்படம்..
கம்யூனிஸ்ட்கள் என்றால் எளிமை,நேர்மை என்றே பெரும்பா லான நேரங்களில் பலரால் சொல் லப்பட்டு வந்துள்ளது. ஆனால் இந்த ஆவணப்படம் கோடிட்டு காட்டியி ருப்பது ஒரு கம்யூனிஸ்டின் செயல் திறன் பற்றியது. எந்த அளவிலான அதிகாரமும் ஒரு கம்யூனிஸ்ட்டின் கையில் கிடைத்தால் அதை வைத்து எப்படி அரசு இயந்திரத்தை, உழைக்கும் மக்களின் நலன்களை நோக்கிச் சுழல வைக்க முடியும் என்பதற்கு மற்றுமொரு உதாரண மாய் அமைந்திருப்பது நாடாளு மன்ற உறுப்பினராக தோழர் சு.வெங்கடேசனின் 5 ஆண்டு கால களப்பணிகள்.
6 வடகிழக்கு மாநிலங்களில் கொடுத்த கல்விக்கடனை விட மதுரை என்ற ஒரு மாவட்டத்தில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் கொ டுக்கப்பட்ட கல்வி கடன் அதிகம், கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்கள்.
லட்சம் கோடிகள் வரை கார்ப்ப ரேட்டுகளுக்கு கடன் தள்ளுபடி செய்யும் சூழலில்,சில லட்சம் கடன் களுக்காக விவசாயிகள் தற்கொலை கள் இன்றும் தொடரும் நிலையில், ஒரே நாள் முகாமில் தகுந்த கார ணங்கள் இன்றி நிராகரிக்கக் கூடாது என்ற அடிப்படையின் கீழ் விண் ணப்பித்த 90 சதவீதம் மாணவர்க ளுக்கு ஒரே நாளில் கல்விக் கடன் உறுதி செய்யப்படுவது என்பது எவ்வளவு அசாதாரணமானது. கல்விக் கடனுக்காக வங்கிகளில் அலைந்தவர்களுக்கு அந்த உண்மை புரியும்.
இதைப் போலவே மாற்றுத் திற னாளிகளுக்கான முகாம்கள், அதன் பயனாளிகளின் வார்த்தைகள், அதன் சிறப்புக்கள் விளக்கப் பட்டுள்ளன.
மிக முக்கியமாக வைகை நதி நாகரிகம் தொடர் எழுதியதில் இருந்து கீழடி அருங்காட்சியகம் அமையும் வரையில் சு.வெங்க டேசனின் பங்கு எத்தகையது, அவர் அதற்காக எடுத்த முயற்சிகள், முன்னெடுத்த போராட்டங்கள் என அதன் மொத்த பயணமும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றைத் தாண்டி நாடாளு மன்றத்தில் அவரின் பேச்சுகள், கேள்விகள்,பதில்கள் மற்றும் கோரிக்கைகள் ,மதுரை மக்களின் பிரச்சனைகளில் அவரது தலையீடு, இப்படி எவ்வளவோ இருக்கின்றது. அவற்றில் சிலவற்றை காணொலி யாக தொகுப்பதற்கே ஒரு 3 மாதங்க ளுக்கு மேல் ஆகிவிட்டது என்கிறார் படத்தின் இயக்குனர் காமாட்சி ராமன்.
30 நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய இந்த ஆவணப்படத்தை பார்த்து விட்டு நண்பர்கள் தங்கள் கருத்துகளை தெரியப்படுத்தலாம்.
மேலும் நேர்த்தியான ஒளிப் பதிவை வழங்கியுள்ள நா.அசோக், சிறப்பாக படத்தொகுப்பு செய்துள்ள ரவி, ஆரவாரமான பின் னணி இசை அமைத்துள்ள ஆர்.ஜே. பிரசாத், எழுத்தாக்கம் செய்துள்ள இரா. சிந்தன், போஸ்டர் டிசைன் மற்றும் உள்ளடக்க ஒருங்கி ணைப்பு பணி ராம்குமார் என மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துக் கள்.
தினேஷ்
மேலே தரப்பட்டுள்ள
கியூ ஆர் கோட்டை ஸ்கேன் செய்து ஆவணப்படத்தை காணலாம்.