tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

சென்னையில் சுட்டெரித்த வெயில்

சென்னை,ஏப்,13- தமிழகத்தில்ஞாயிறன்று  8 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதன்படி, வேலூர், கடலூர், ஈரோடு, மதுரை,  சேலம், புதுச்சேரி, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் 104.18 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. கடலூரில் 102.56 டிகிரி, ஈரோட்டில் 101.84 டிகிரி, மதுரையில் 100.4 டிகிரி, சேலம் மற்றும் புதுச்சேரி யில் தலா 100.4 டிகிரி, திருத்தணியில் 100 டிகிரி ஃபாரன் ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் தலா 103 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. வேலூரில் காலை முதல் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்  சுட்டெரித்த நிலையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து  வருகிறது.

ந்தியா மார்ட் நிறுவன இயக்குநர்கள் மீது வழக்கு

சென்னை,ஏப்,13- இந்தியா மார்ட் நிறுவனம், அதன் இயக்குநர்கள் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தியா மாரட் இயக்குனர்கள் மீது ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையங்களில் 2 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா மார்ட் நிறுவனம் மூலம் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், போதைப் பொருள் தடுப்பு போலீசார் இந்த நட வடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

துரித செயல்திறன்,பிரமாண்ட  பேட்டரியுடன் புதிய செல்போன்

சென்னை, ஏப். 13-  உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டான ஐக்யூஓஓ நிறுவனம், இசட்10 மற்றும் இசட்10எக்ஸ் என 2  புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள் ளது. அதிநவீன செயல்திறன் மற்றும் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்கள், சக்திவாய்ந்த இணைப்பு, அதிவேக பொழுதுபோக்கு மற்றும் நாள் முழுவதும் நம்பகமான செயல்திறனைத் தேடும் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது..  இசட்10 ஸ்மார்ட்போன்  8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் ரூ.19,999-க்கும் 8ஜிபி மற்றும் 256ஜிபி உடன் 21,999 ரூபாய்க்கும் மற்றும் 12ஜிபி மற்றும் 256ஜிபி உடன் 25,999 ரூபாய்க்கும் வரும் 16-ந்தேதி நண்பகல் 12 மணி முதல் விற்பனைக்கு வருகிறது.  

சாலை ஓரம் நின்ற லாரி  ஓட்டுநரை தாக்கி பணம் பறிப்பு

 கடலூர்,ஏப்.13-  கடலூர் மாவட்டத்தில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த லாரி ஓட்டுநரை தாக்கி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் மீண்டும். நடைபெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் இருந்து  கருங்கல் ஜல்லிகளை ஏற்றுக்கொண்ட லாரி குறிஞ்சிப்பா டிக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரி ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் குள்ளஞ்சாவடி அருகே உள்ள தம்பிபேட்டை  பகுதிக்கு வந்து கொண்டி ருந்தபோது லாரி ஓட்டுனர் சாலை ஓரமாக லாரி நிறுத்தி விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.  அப்போது அந்த பகுதிக்கு வந்த இரண்டு நபர்கள் அந்த லாரி ஓட்டுனரிடம் எவ்வளவு பணம் உள்ளது என்று  கேட்டுள்ளார்கள் லாரி ஓட்டுனர் பணம் இல்லை என்று கூறி யதை தொடர்ந்து லாரி ஓட்டுனரை தாக்கியுள்ளார்கள். மேலும் அந்த லாரியின் கண்ணாடி மற்றும் முகப்பு விளக்குகளை உடைத்த அவர்கள் பின்னர் லாரி ஓட்டுனரின் செல்போனை சாலையில் அடித்து உடைத்திருக்கிறார்கள். அதன்பிறகு லாரி ஓட்டுனரின் பாக்கெட்டில் ஆயிரம் ரூபாய் பணத்தினை அவர்கள் பறித்து சென்றுள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து  லாரி ஓட்டுனர் ராஜி  குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.  கடந்த இரண்டாம் தேதி இதே போல் கடலூர் மாவட்டத்தில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த மூன்று லாரி ஓட்டுனர்களை அடுத்தடுத்து தாக்கி அவர்களிடமிருந்து பணம் மட்டும் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய புதுவை மாநிலத்தைச் சேர்ந்த மொட்டை விஜய் என்பவரை  போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். இந்த பர பரப்பு அடங்குவதற்குள் அடுத்த சம்பவம் இந்த பகுதியில் நடைபெற்றுள்ளது.  மீண்டும் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டு நர்களை அச்சமடைய செய்துள்ளது. இந்த வழக்கில் தொடர்பு டைய நபர்கள் குறித்து லாரி ஓட்டுநர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது போலீசார் தீவிர தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டுள்ளனர். தொடரும் லாரி ஓட்டுனர்கள் மீதான தாக்குதல் மற்றும் கொள்ளை சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.