சென்னை, செப்.7- சனாதன, ஆபாச பிரச்சா ரப் பேர்வழியான மகா விஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர்
பரம்பொருள் பவுண்டே ஷனைச் சேர்ந்த மகா விஷ்ணு என்பவரை, மாண வர்களுக்கு மோட்டி வேஷன் ஸ்பீச் வழங்குவ தற்காக சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளி நிர்வா கத்தினர் அழைத்துள்ளனர். ஆனால், மூடநம்பிக்கையை பரப்பும் வகையிலும், ஆபா சமாகவும் மகாவிஷ்ணு பேசி யது அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. இந்த சனாதன - ஆபாச பேச்சை உடனுக்குடன் தட்டிக்கேட்ட மாற்றுத்திறன் ஆசிரியர் சங்கரையும் மகா விஷ்ணு மிரட்டியிருந்தார்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலா னதைத் தொடர்ந்து, இந்திய மாணவர் சங்கம் மற்றும் தமிழ் நாடு அனைத்துவகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தினர் மறு நாள் காலையில் அந்தப் பள் ளியின் முன்பு மறியல் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி அந்த பள்ளிக்கு சென்று மாணவர்களை சந்தித்து தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார். மேலும், மூடநம்பிக்கை பிரச்சாரத் திற்கு கடும் கண்டனம் தெரி வித்தார். பல்வேறு அரசியல் கட்சியினரும் பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவ னர் மகாவிஷ்ணுவின் பேச் சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
பள்ளி மாணவிகள் மத்தி யில் மூடநம்பிக்கை கருத்துக் கள் பரப்பியதோடு மாற்றுத் திறன் ஆசிரியரை மிரட்டிய மகாவிஷ்ணுவை கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே. பாலகிருஷ்ணன் அறி க்கை ஒன்றில் வலியுறுத்தி யிருந்தார்.
சென்னை சைதாப் பேட்டை காவல் நிலையத் தில் மாற்றுத்திறனாளிகள் சங் கம் அளித்த புகாரை பதிவு செய்த காவல்துறையினர் மகாவிஷ்ணுவை தேடி வந்த னர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி குளத்துபாளையம் பகுதியில் இயங்கி வந்த பரம்பொருள் அறக்கட்டளை தலைமை அலுவலகத்திற் கும் சென்று காவல்துறை யினர் விசாரணை மேற் கொண்டனர்.
அப்போது, மதுரையை பூர்வீகமாக கொண்ட மகா விஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளைக்கு சிங்கப் பூர், மலேசியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா உள் ளிட்ட நாடுகளில் கிளைகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும், மகாவிஷ்ணு ஆஸ் திரேலியாவுக்கு சென்றி ருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், ஆஸ்தி ரேலியாவில் இருந்து சனிக் கிழமை (செப்.7) பிற்பகல் சென்னை திரும்பிய மகா விஷ்ணுவை விமான நிலை யத்தில் வைத்து சைதாப் பேட்டை உதவி ஆணையர் தலைமையிலான காவலர் கள் கைது செய்து விசார ணைக்கு அழைத்துச் சென்ற னர்.
5 பிரிவுகளில் வழக்கு
மகாவிஷ்ணு மீது இரு பிரிவினரிடையே பகையை தூண்டுதல், பொது அமை திக்கு குந்தகம் விளைவித் தல், அவமதித்தல், வதந்தி கள், பொய்யான தகவல்கள் பரப்புதல் உள்ளிட்ட பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.