தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் இனி ஆட்டிறைச்சி விற்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்டிறைச்சி ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறு விலைகளில் விற்கப்படுகிறது. பொதுவாகப் பண்டிகை காலங்களிலும் விடுமுறை நாட்களிலும் ஆட்டிறைச்சி விலை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.
இந்நிலையில் இனி தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தினந்தோறும் விலையை அறிவிக்கும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கப்படும் என தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் டாக்டர் என்.சுப்பையன் பேட்டியளித்துள்ளார்.