tamilnadu

img

முன்பதிவு இல்லாமலும் சபரிமலை தரிசனம்

ஆன்லைன் பதிவு இல்லாமல் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சுமூகமாக தரிசனம் செய்வது உறுதி செய்யப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

வி.ஜாய் எம்எல்ஏ எழுப்பிய கேள்வி க்கு முதல்வர் பினராயி விஜயன் அளித்த பதிலில்,”கடந்த ஆண்டுகளிலும் இது போன்ற தரிசனம் உறுதி செய்யப் பட்டது. சபரிமலைக்கான மண்டலம் - மகர விளக்கு பயணத்தை எளிதாக்கும் நட வடிக்கைகளின் ஒரு பகுதியாக, திரு விதாங்கூர் தேவசம் போர்டு, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் முதல்வர் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடத்தி விரிவான திட்டமிடல் செய்யப்பட்டது. துறை அமைச்சர், திரு விதாங்கூர் தேவசம் போர்டு, காவல் துறை, வனம், சுகாதாரம், பொதுப் பணித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு, சட்ட அளவியல், பேரிடர் மேலாண் மை, உணவு மற்றும் பொது விநியோ கம், நீர்ப்பாசனம், கேஎஸ்இபி, கேஎஸ் ஆர்டிசி, பிஎஸ்என்எல், நீர் ஆணையம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகள் மற்றும் நிறுவனங்கள் சிறப்பான வசதிகளை உறுதி செய்யும். சன்னிதானம், பம்பா மற்றும் அனைத்து பயணிகளுக்கான ஓய்விடம், வாகன நிறுத்தங்கள் இடையே ஒருங்கி ணைப்பை மேம்படுத்த தேவையான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய ஸ்பாட் புக்கிங்கை அனுமதிப் பது குறித்து அக்டோபர் 5ஆம் தேதி நடை பெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. பக்தர்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான முறையில் தரிசனம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் மதிப்பீடு செய்யப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த தேவை யான ஏற்பாடுகளை முன்னரே மேற் கொள்ளும் வகையில் மெய்நிகர் வரி சையில் பக்தர்கள் பயணத்திற்கு எந்த பாதையை தேர்வு செய்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை மென்பொருளில் கொண்டு வந்து பக்தர்களை அனு மதிக்க கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.

கூட்டம் குறைவாக உள்ள நாட்க ளில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யவும், ஒவ்வொரு நாளும் முன்பதிவு செய்யப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை மாவட்ட நிர்வா கம், காவல்துறை மற்றும் பிற துறைக ளுக்கு முன்கூட்டியே வழங்கவும், சபரி மலைக்கு வரும் பக்தர்கள் அனைவ ருக்கும் வசதி செய்து தருவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மெய் நிகர் வரிசை பதிவு மூலம் பக்தர்களின் விவரங்கள் டிஜிட்டல் ஆவணமாக கிடைக்கும். இது சபரிமலையில் பாது காப்பை உறுதி செய்வதற்கும், விபத்து கள் மற்றும் பேரிடர் ஏற்பட்டால் மக்க ளைக் கண்டுபிடிப்பதற்கும் உதவியாக இருக்கும்.

கடந்த ஆண்டை விட சிறந்த பயண வசதிகளை அரசு உறுதி செய்துள்ளது. மேலும் திருப்பதி உள்ளிட்ட முக்கிய புனிதப் பயண மையங்களில் மெய்நிகர் வரிசை முறை குறைபாடற்ற முறை யில் இயங்குகிறது. அதே மாதிரியில், சபரிமலையில் 2011 முதல் மெய்நிகர் வரிசை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மெய்நிகர் வரிசையை குறைபாடற்ற முறையில் வலுப்படுத்துவதே நோக்கம் என்று முதல்வர் கூறினார்.