tamilnadu

img

ரூ. 51 ஆயிரத்து 157 கோடியில் 28 புதிய தொழிற்சாலைகள்! முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

சென்னை, ஆக. 21 - 2021-ஆம் ஆண்டு தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மு.க.  ஸ்டாலின் தலைமையிலான அரசு, தமிழ்நாட்டை 2030-ஆம் ஆண்டுக் குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்தியப் பொரு ளாதாரத்துக்கு மிக முக்கிய பங் களிக்கும் மாநிலமாகவும் உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது.

இதன் 4-ஆம் கட்டமாக ஜனவரி 27 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு சென் றார். அதன் பயனாக ரூ. 3 ஆயிரத்து 440 கோடி அளவுக்கு தொழில் முத லீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட் டன. இதுவரை புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் வாயிலாக ரூ. 8 லட்சத்து 64 ஆயிரம் கோடி முதலீடுகள் தமிழ கத்துக்கு ஈர்க்கப்பட்டதுடன் 30  லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 27 அன்று அமெரிக்கா செல்கிறார். 

முன்னதாக சென்னையில் புத னன்று (ஆக. 21) தமிழ்நாடு தொழில் முதலீட்டு மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தனியார் ஹோட்டலில் நடை பெற்ற இந்த மாநாட்டில் ஏற்கென வே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்ட நிறுவனங்களில் 19 நிறுவனங்கள் ரூ. 17 ஆயிரத்து 616 கோடி முதலீட்டிலான தொழிற் சாலைகளுக்கான பணியை முதல் வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இவற்றில் திருவள்ளூர் மாவட்ட த்தில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயந் திர மின்னணுவியல் உபகரண தொழிற்சாலை, திருவண்ணா மலையில் ராயல் என்பீல்டு மோட் டார் தொழிற்சாலை, செங்கல் பட்டு, கிருஷ்ணகிரி, விருதுநகரில் அமைக்கப்பட்ட சுந்தரம் பாச னர்ஸ் தொழிற்சாலை, செங்கல் பட்டில் ரெனால்டு நிஸான் தொழில் நுட்ப வர்த்தக மையம், கிருஷ்ண கிரியில் வெக் இண்டஸ்ட்ரீஸ் ஆகி யவை முக்கியமானவை ஆகும்.

மேலும், ரூ. 51 ஆயிரத்து 157  கோடி முதலீட்டில் அமைய உள்ள 28 புதிய தொழில் திட்டங்களுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட செம்ப் கார்ப் இண்டஸ்ட்ரீஸ் நிறு வனம் 36 ஆயிரத்து 238 கோடி ரூபாய் முதலீட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி தளம் அமைப்பதற்காக ஏற்கெனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக இப்போது இந்த தொழிற்சாலைக்கு முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் யூனிட் நிறுவனம் அமையும் போது சுமார் 1,511 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக் கும். இதன்மூலம் தென் மாவட்ட மான தூத்துக்குடி இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப் ஆக மாறும்.
தூத்துக்குடியில் அமைக்கப் படும் ஆலையில் உற்பத்தி செய்யப் படும் பசுமை அம்மோனியாவை ஆதாரமாக வைத்து பசுமை ஹைட்ர ஜன் எரிவாயு உருவாக்கப்பட உள்ள தாக செம்ப் கார்ப் நிறுவனம் தெரி வித்துள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப் படும் பசுமை ஹைட்ரஜனை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சோஜிட்ஸ் கார்ப் மற்றும் கியூஷு எலக்ட்ரிக் பவர் உள்ளிட்ட ஜப்பான் நிறுவனங்களுடன் செம்ப் கார்ப் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மூலம் 1 லட்ச த்து 6 ஆயிரத்து 803 புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வழிவகை உருவாக்கப்பட்டுள்ளதாக அதி காரிகள் தெரிவித்தனர்.

விழாவில் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, துறைச் செயலாளர் அருண் ராய் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர், “கடந்த மூன்று ஆண்டுகளில், 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பை உரு வாக்கும் வகையில், 9 லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு களை ஈர்த்திருக்கிறோம்” என்றார்.