சென்னை, ஆக. 22 - திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்காவில், டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனம் ரூ. 400 கோடி முதலீடு மற்றும் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய உற்பத்தி ஆலையை நிறுவுகிறது.
இதுதொடர்பாக, வியாழனன்று (ஆக.22) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்த கத்துறை சார்பில், தமிழ்நாடு அரசிற்கும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
வீட்டுப் பராமரிப்பு, தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் பழச்சாறு பொருட்கள் போன்ற பொருட் களை உற்பத்தி செய்து வரும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனமானது, தென்னிந்தியா விலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையைநிறுவுகிறது.
இந்த நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செய லாளர் நா. முருகானந்தம், தொழில் - முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை செயலாளர் வி.அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறு வனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே. விஷ்ணு, சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்கு நர் மருத்துவர் மு. செந்தில்ராஜ், டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அலு வலர் மோஹித் மல்ஹோத்ரா, செயல்பாட்டுத் தலைவர் ராகுல் அவஸ்தி, உற்பத்தித் தலை வர் ஹரிகேஷ் ரமணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.