சென்னை தின குறும்படப் போட்டி முதல் பரிசு பெறும் படத்திற்கு ரூ.1 லட்சம்
சென்னை, ஜூலை 31 சென்னை நகரம் தோற்று விக்கப்பட்டதாகக் கருதப் படும் ஆகஸ்ட் 22ந்தேதி ஆண்டு தோறும் சென்னை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை நகரின் பாரம்பரியம், சிறப்பு மற்றும் அதன் தனித்துவத்தை போற்றி கவுரவிக்கும் வகை யில் சூப்பர் சென்னை அமைப்பு “நம்ம கதைகள்” என்ற குறும் படப் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில், சென்னை நகரை ஒவ்வொருவரும் எப்படி பார்க்கிறார்கள், அதன் அழகு, வசீகரம் மற்றும் காலத்தால் அழியாத சிறப்புமிக்க இடங்கள், அதன் மாற்றம் என அவர்களுக்கு தோன்றுவதை அவர்கள் குறும்படமாக எடுத்து அனுப்ப லாம். இந்த குறும்படம் அடுத்தமாதம் 15-ந் தேதிக்குள் வந்துசேரும்படி அனுப்பி வைக்கப்பட வேண்டும். இதில் திரைப்படத் தயா ரிப்பாளர்கள், மாணவர்கள், தொழில்துறை வல்லுநர்கள், பொது மக்கள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்க லாம். இந்த குறும்படத்தை ஸ்மார்ட்போன் அல்லது வீடியோ கேமரா என எதில் வேண்டுமானாலும் எடுத்து அனுப்பலாம். இந்த போட்டியில் பங்கேற் பதற்கு வயது ஒரு தடையில்லை. ஆக.22 சென்னை தினத்தில் சிறந்த படைப்புகள் திரையிடப்படுவதோடு முதல் இடம் பிடித்த படத்திற்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். ஆர்வமுள்ள பங்கேற்பா ளர்கள் தங்கள் குறும்படங்களை hello@superchennai.com என்ற மின்னஞ்சல் முக வரிக்கு அனுப்பி வைக்கலாம். ஒவ்வொரு குறும்படமும் 5 நிமிடம் வரை இருக்கலாம், மேலும் அவை சென்னையை பற்றி மட்டுமே இருக்க வேண்டும்.