tamilnadu

ரூ. 9 ஆயிரம் கோடி முதலீடு: தமிழக அரசு முடிவு...

சென்னை:
புதிதாக 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய வகைசெய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு விரைவில் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இழந்து வரும் பொருளாதாரத்தை மீட்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய, அழைப்பு விடுத்தும், தொழில் நிறுவனங்களுக்கு, முதல்வர் அவ்வப்போது கடிதம் எழுதிய வண்ணம் இருந்து வருகிறார்.முதலீடு செய்ய வரும்படி, முன்னணி மோட்டார் நிறுவனங்களுக்கு கடந்த ஜூன் மாதத்தில் அழைப்பு விடுக்கப் பட்டது.கொரோனாத் தொற்று மற்றும் அதனால் பிறப்பிக்கப் பட்ட ஊரடங்கிலும் கூட 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு பெறப்பட்டதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.தற்போது, மேலும், 9,000 கோடி ரூபாய் வரை முதலீடு கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் தொழில் துவங்க, ஏப்ரல் முதல் ஜூலை வரை, 41 நிறுவனங்கள், அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இதன் மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடும், 66 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்க உள்ளது. மேலும் கூடுதலாக, 9,000 கோடி ரூபாய் முதலீடுகள் கிடைக்க உள்ளது.அதன்படி 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவுள்ளது. இதன் மூலம் 6,000த்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது என்று கூறினர்முதலீடு குறித்த விபரத்தை, முதல்வர் தனது டுவிட்டர்’ பக்கத்தில் தமிழகத்தின் பொருளாதாரத்தை சரியான பாதையில், கொண்டு வருவதற்கான, எங்களுடைய உறுதியான முயற்சிகள் பலனை தருகின்றன என்று, குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.