tamilnadu

img

ரூ.250 கோடியில் 8 வழிச் சாலை: அரசு ஒப்புதல்...

சென்னை:
சென்னை அருகே கூடுவாஞ்சேரி - பரனூர் இடையே 8 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் திட்டத்துக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.

தமிழகத்தின் 30 மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் தெற்கு நுழைவாயிலாக உள்ள    தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ளதால் அதை 8 வழிச்சாலையாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாகப் பெருங்களத்தூர் முதல் கூடுவாஞ்சேரி வரையுள்ள பகுதியில் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதால், அடுத்த கட்டமாகக் கூடுவாஞ்சேரி முதல் பரனூர் வரையிலான 13 கிலோ மீட்டர் நீளத்துக்கு 8 வழிச்சாலையாக விரிவாக்கப்பட உள்ளது.250 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்தத் திட்டத்துக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இதையடுத்துச் சாலைப் பணிக்காக மின்கம்பங்களை இடமாற்றுவது குறித்து மின்வாரியத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளது. 8 வழிச்சாலைப் பணிகளை முடிக்க ஓராண்டு ஆகும் என நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.