அம்பத்தூர், ஜூன் 24- அம்பத்தூர், ஓரகடம், அண்ணா நெடுஞ்சாலை சேர்ந்தவர் விஜய குமாரி (58). கடந்த 2012ஆம் ஆண்டு இவர் குடியிருக்கும் 6,650 சதுரடி வீட்டை இடித்து விட்டு அடுக்குமாடி குடியிரு ப்புகள் கட்டி, அதில் 5 வீடுகளும் ரூ.30 லட்சம் பணம் தருவதாக ராதாகிருஷ் ணன், துளசிராமன், ராஜன் ஆகிய மூவரும் விஜயகுமாரிடம் கூறியுள்ள னர். அதனை நம்பிய விஜயகுமாரி கொடுத்த வீட்டின் அசல் ஆவணத்தை கிண்டிலுள்ள வங்கியில் அடமானம் வைத்து ரூ.92 லட்சம் பணத்தை விஜய குமாரியின் கையெழுத்தை பெற்று, ராதாகிருஷ்ணன் பணத்தை வாங்கி உள்ளனர். இதன் பிறகு, சில மாதங்கள் ஆகியும் வீடு கட்ட எந்த ஒரு ஏற்பாடும் செய்யாததால், சந்தேகம் அடைந்த விஜயகுமாரி மேற்கண்ட 3 பேரும் அவர்கள் கூறிய முகவரியில் இல்லை. இதையடுத்து விஜயகுமார் தொடர்ந்து 8 ஆண்டுகளாக அவர்களை தேடியும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. இதற் கிடையில் வங்கியில் இருந்து விஜய குமாரி வீட்டுக்கு அதிகாரிகள் வந்து, உங்கள் வீட்டை அரிச்சந்திரன் என்பவர் பெயரில் ரூ.92 லட்சம் அடமானம் வைத்திருப்பதாக அதற்கு வட்டியுடன் சேர்ந்து ரூ.1.50 கோடி கட்ட வேண்டும் என கூறி விட்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து விஜயகுமாரி அரிச் சந்திரனை அவரது முகவரியில் தேடி யும் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து விஜய குமாரி ஆவடி காவல் ஆணைய ரகத்தில் அண்மையில் புகார் செய்தார். ஆணையர் சங்கர் புகார் மனுவை, ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். காவல் ஆய்வாளர் வள்ளி தலைமையில் காவல் துறை யினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை, கொடுங்கை யூர், கட்டபொம்மன் பிரதான சாலை யைச் சேர்ந்த துளசிராமன் (44) என்ப வரை திங்கள்கிழமை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.