அம்பத்தூர், ஆக.6- பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.1.20 கோடி மோசடி செய்த வழக்கில், முகவராக செயல்பட்ட இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (53). கடந்த மாதம் குணசேகரன் வாட்சாபில் வந்த தகவலில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என விளம்ப ரத்தைப் பார்த்துள்ளார்.
இதையடுத்து, அதில் குறிப்பிட்ட வங்கி கணக்குகளில் பல தவணையாக கொஞ்சம், கொஞ்சமாக ரூ.1 கோடியே 20லட்சம் வரை முதலீடு செய்து ள்ளார். பின்னர் அவர் செலுத்திய பணத்திற்கு கணக்குகளில் காட்டிய லாபப் பணத்தை எடுக்க முடியாமல் போனதை உணர்ந்து ஏமாற்றம் அடைந்துள்ளார். இது குறித்து குணசேகரன் கடந்த மாதம் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மோசடி செயலில் ஈடுபட்ட நபரின் வங்கி கணக்கு களை கொடுத்து மோசடி கும்பலுக்கு முக வராக செயல்பட்ட திருவள்ளூர் அருகே மணவூர், மருதவல்லிபுரத்தைச் சேர்ந்த கிரிதரன் (23) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து காவல் துறையினர் திங்க ளன்று கிரிதரனை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறை யில் அடைத்தனர். தொடர்ந்து போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் இணைய வழி குற்றச்செயல் மூலம் பணமோசடி செயலுக்கு உடந்தையாக இருந்து, அக்கும்பலுக்கு முகவராக செயல்பட்டதும், இதன் மூலம் நாட்டின் பல மாநிலங்களைச் சேர்ந்த பல நபர்களை ஏமாற்ற உடந்தையாக இருந்த தும், பல கோடி ரூபாயை மோசடிக்காரர்கள் சுருட்டியதும் தெரியவந்தது. தொடர்ந்து இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளிகளை இணைய வழி குற்றப்பிரிவு காவல் துறையினர் தேடி வருகின்றனர்.