சென்னை, ஜூலை 8 - பெருநகர சென்னை மாநகராட்சி, 121வது வட்டத்தில் ரோட்டரி நகர், கபாலி நகர், மாயாண்டி காலனி, துவார நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் சுமார் 3 ஆயி ரம் குடும்ப அட்டைகள் உள்ளன.
இந்த மக்கள் பொருட்கள் வாங்க ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாயிட்ஸ் சாலை நியாயவிலைக் கடைக்கு செல்ல வேண்டி உள்ளது. லாயிட்ஸ் சாலை நியாய விலைக் கடையில் 4500 குடும்ப அட்டைகள் உள்ளன. இதனால் மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரி சையில் நின்று பொருட் களை வாங்க வேண்டி உள்ளது. பொருட்களை வாங்க கூட்டம் அதிகமாகும் போது மக்களிடம் தேவை யற்ற சச்சரவுகள் எழு கின்றன. உடலுழைப்பு தொழிலாளிகளாக உள்ள மக்கள் ஒரு நாள் வேலை இழந்து பொருட்களை வாங்க வேண்டிய நிலை உருவாகிறது.
ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள பகுதிகளில் புதிய நியாயவிலைக் கடைகள் திறக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்தச் சூழலில் ரோட்டரி நகர் 1வது தெருவில் 121வது வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரேசன் கடை கட்டப் பட்டு பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. எனவே, ரேசன் கடையை விரைந்து திறந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலி யுறுத்தி அப்பகுதி முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டுள்ளன.
மேலும், பொதுமக்களி டம் பெறப்பட்ட கையெ ழுத்து களுடன் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செய லாளருக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் 121வது வட்டச் செயலாளர் கே.விநாயகம் கடிதம் எழுதியுள்ளார்