tamilnadu

சென்னையில் கால்பந்து விளையாடிய ரொனால்டினோ

சென்னையில் கால்பந்து விளையாடிய ரொனால்டினோ

சர்வதேச கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டினோ சென்னையில் விளையாடி யது வாழ்நாளில் மறக்க முடியாத போட்டி என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரி வித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கால்பந்து கண்காட்சி  போட்டியில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் பிரேசில் லெஜெண்ட்ஸ் அணிக்காக, 1994 மற்றும் 2002ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணி வீரர்கள், இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்காக, இந்திய அணியின் ஓய்வு பெற்ற வர்கள் களமிறங்கினர்.போட்டியை தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்தப் போட்டியில் உலக கோப்பை வென்ற அணியில் இருந்த பிரேசில் வீரர்களைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க போராடிய நிலையில், இரண்டு அணிகளும் கோல் அடிக்க முடிய வில்லை. பிரேசில் அணியின் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ ஆட்டத்திலிருந்து பாதியில் வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. தொடர்ந்து இரண்டாவது பாதியில், 43வது நிமிடத்தில் வயோலா முதல் கோல் அடித்து பிரேசிலுக்கு முன்னிலை பெற்றுக்கொடுத்தார். ஆனால் அடுத்த ஒரே நிமிடத்தில் (44’) இந்தியாவின் பியானோ பெர்னாண்டஸ் கோல் அடித்து 1-1 என்ற கணக்கில் ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார்.சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு மாற்று வீரராக களமிறங்கிய ரிக்கார்டோ ஒலி வேரா 63வது நிமிடத்தில் கோல் அடிக்க, பிரேசில் லெஜண்ட்ஸ் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து போராடியும், இந்திய அணி யால் கோல் அடிக்க முடியவில்லை. இதன் விளைவாக பிரேசில் லெஜண்ட்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.