tamilnadu

img

5 வயது குழந்தைக்கு ரோபோட்டிக் முறையில் கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை!

5 வயது குழந்தைக்கு ரோபோட்டிக் முறையில்  கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை!

உலகில் முதன்முறையாக சென்னையில் 

சென்னை, மே 22- உலகின் முதன்முறை யாக சென்னையில் ஐந்து வயது குழந்தைக்கு ரோ போட்டிக் முறையில் கல்லீரல் மாற்று சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. சென்னை குரோம்பேட் டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அரியானா மாநிலத்தை சேர்ந்த அந்த குழந்தை யூரியா சுழற்சி குறைபாடு என அழைக்கப் படும் ஒரு அரிதான மர பியல் கோளாறால் பாதிக்கப்  பட்டிருந்தது. இத்தகைய நிலையில்,  சாப்பிட்டால் உணவில் உள்ள  புரதங்க   களை முறையாக கல்லீர லால் செரிமானம்  செய்ய இயலாது.  இதன் காரண மாக, ரத்தத்தில் அமோ னியா அதிகமாக சேர்ந்து விடும். இதனால் அந்த சிறுவனுக்கு மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தி உயி ருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வந்தது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு என்ற நிலையில் ஒரு நபரிடமிருந்து தானம் பெறப்பட்ட கல்லீரலை கொண்டு ரேலா மருத்துவ மனையில் ரோபோட்டிக் முறையில் நுண்துளை அறுவை சிகிச்சை செய்யப் பட்டு சிறுவனுக்கு  கல்லீரல் பொருத்தப்பட்டது. இத்தகைய அறுவை சிகிச்சையால் மருத்துவ மனையில் அதிக நாட்கள் தங்கவேண்டியதில்லை. வழக்கமான அறுவை சிகிச்சையில் 14 முதல் 21 நாட்கள் மருத்துவ மனையில் தங்க வேண்டி யிருக்கும்.  இந்த குழந்தை யும் 4 நாட்களில் குணமாகி நடக்க ஆரம்பித்தான். இப்போது சாப்பிட்ட பின்னர் பிரச்சனை ஏதும் ஏற்படுவதில்லை என்று மருத்துவமனையின் தலை வர் டாக்டர் முகமது ரேலா கூறினார். உலகில் ரோபோட்டிக் முறையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பெற்ற முதலாவது இளம் வயது குழந்தை இந்த குழந்தை என்றும் விரைவில் இந்த அறுவை சிகிச்சை அமெரிக்க மருத்து இதழில் வெளியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். வழக்கமான சிகிச்சை செயல்முறையில் 14 முதல் 21 நாட்கள் வரை இச்சிகிச்சையைப் பெறும் நோயாளி மருத்துவ மனையில் தங்க வேண்டி யிருக்கும். பேட்டியின் போது கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை துறையின் முது நிலை நிபுணரான ராஜேஷ் ராஜலிங்கம், இரைப்பை குடலியல் மற்றும் கல்லீர லியல் துறையின் முதுநிலை நிபு ணர் நரேஷ் சண்முகம் மற்றும் குழந்தையின் பெற்றோர் உடனிருந்தனர்.