tamilnadu

img

பண்டிகை காலத்தையொட்டி ஸ்மார்ட் சிட்டி பணிகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்

சென்னை, செப். 30- பண்டிகை காலங்களை முன்னிட்டு பழைய வண்ணாரப்பேட்டை ஜி.ஏ. ரோடு - எம்.சி. ரோடு பகுதிகளில் நடை பெறும் ஸ்மார்ட் சிட்டி கட்டுமான பணிகளை தற்காலிகமாக நிறுத்த கோரி எம்.சி.ரோடு ஜி.ஏ.ரோடு சாலையோர சிறுகடை வியாபாரிகள் சங்கம் சார்பில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. மண்டலம் 5க்கு உட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டையில் 13 ஆண்டுகளாக 165 வியாபாரிகள் சென்னை மாநகராட்சி அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு பயோமெட்ரிக் காடுகள் வழங்கப்பட்டு வியாபாரம் செய்து வருகிறார்கள். தற்போது சென்னை மாநகராட்சி 2.0 திட்டத்தின் அடிப்படையில் எம்.ஜி. ரோடு, ஜி.ஏ. ரோடு பகுதியில் ஸ்மார்ட் சிட்டி அமைப்பது என்றும், 18 மாதங்களில் பணிகள் நிறைவு செய்யப்படும் என்ற அடிப்படையில், சாலைகளின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டும் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் பண்டிகை கால வியாபாரம் தொடங்க இருக்கிறது. சாதாரணமாகவே வியா பார காலங்களில் இப்பகுதிகளில்  மிகுந்த நெரிசல் மிகுந்த பகுதி யாகக் காணப்படும். தற்போது ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடை பெறுவதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். தொடர்ந்து பணிகள் நடைபெறுவதால் வியாபாரிகள் அங்கும் இங்கும் மாறி மாறி கடை போடும் சூழலில் வியாபாரம் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பண்டிகை காலங்கள் முடியும் வரை ஸ்மார்ட் சிட்டி பணி களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிவடைந்த பிறகு வியா பாரம் செய்யும் இடத்திலேயே வியா பாரிகளுக்கு கடைகளை முறைப்படுத்தி வழங்க வேண்டும் என்றும் மண்டல அலுவலர் பரிதா பானு மற்றும் செயற்பொறியாளர் சொக்கலிங்கம் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், வரும் சனிக்கிழமை யோடு (அக்.5)  ஸ்மார்ட் சிட்டி பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று உறுதி அளித்த னர் என்று சங்க நிர்வாகிகள் தெரி வித்தனர். இதில் சென்னை மாவட்ட சாலை யோர வியாபாரிகளின் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.வெங்கட், நகர மன்ற விற்பனை குழு உறுப்பினரும், எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு சாலையோர சிறுகடை வியாபாரிகள் சங்கத்தின் தலைவருமான கே.பலராமன், செயலாளர் பா.பாக்கியலட்சுமி, பொருளாளர் ரபீக், சங்கத்தின் ஆலோசகர் எஸ்.பவானி ஆகியோர் கலந்து கொண்டனர்.