tamilnadu

பண்ருட்டியில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

பண்ருட்டியில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

 கடலூர்,மார்ச் 3- பண்ருட்டி பகுதியில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணியில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழி யர்கள் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட தட்டாஞ்சாவடி, காந்தி ரோடு, கடலூர் சாலை எம்.ஜி.ஆர். சிலை வரையும் சாலை ஓரம் உள்ள  ஆக்கிரமிப்புகளை  அகற்ற நகராட்சி ஆணையரால் கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கப்பட் டது.அதில் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அகற்ற தவறினால் அதில் ஏற்படும் செலவு தொகையை சம்பந்தப்பட்ட சொத்து. உரிமையாளர் மீது கணக்கில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்.ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆக்கிர மிப்பு அகற்றும் பணி ஊழியர்கள் ஈடுபட்டனர்.  இதில் நகராட்சி  மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. அசம்பா விதங்கள் ஏற்படாதவாரு 20க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் போக்குவரத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பழங்குடியினத்தை சேர்ந்த  30 பேருக்கு இலவச மனைப்பட்டா  

கடலூர்,மார்ச் 3- கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று (மார்ச் 3) ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 871 மனுக்கள் பெறப் பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், வருவாய்த்துறை சார்பில் 30 பழங்குடியின மக்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினை ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜ சேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜீ, மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் நல அலுவலர் சங்கர், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி, பயிற்சி ஆட்சியர் ஆகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.