சென்னை, ஜூன் 24- தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்க ளன்று ஜூன் 24 கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை விதி ‘110’-இன் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிராமப்புற சாலைகளை மேம்படுத்தும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதி களைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகி றோம். நகரம், கிராமம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து வளர்ச்சிகளையும் வழங்கி வருகிறோம். அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்துச் சமூக வளர்ச்சி என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரு கிறோம். இதில் சாலை வளர்ச்சி என்பது மிக, மிக முக்கியமானது. நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் சாலை மேம்பாட்டை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது .
வறுமையை ஒழிக்கும் சாலைகள்
கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள், கிராமப்புற மக்களின் பொருளா தார வளர்ச்சிக்கு வித்திட்டு வறுமையை ஒழிப்பதில் முக்கியக் காரணியாக உள் ளன. தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சத்து 38 ஆயி ரம் கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் உள் ளன. ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளை மேலும் மேம்படுத்தும் விதமாக ஒரு புதிய அறிவிப்பை இப்போது நான் வெளியிட விரும்புகின்றேன்.
ஊரகச் சாலைகளில் செய்யப்படும் முத லீட்டிற்கும் ஊரக மக்களின் நலனிற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. சாலைகளின் உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துச் சேவைகளின் மேம்பாடு என்பது ஊரகப் பகுதி களில் வணிகச் செயல் திறனை அதிகப் படுத்துகிறது. அதன்மூலம், இடுபொருள் செலவினைக் குறைத்து வேளாண் உற்பத்தி யை அதிகரித்து, ஊரக வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. தரமான சாலைகள், கிராமப்புற மக்களின் வருமான அளவில் உயர்த்துகிறது.
கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளை வழங்கி, அறிவாற்றலைப் பரவலாக்கி, சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து வளர்ச்சியைத் துரிதப்படுத்த உதவு கிறது. எனவேதான், பேருந்து செல்லக்கூடிய சாலைகள், குக்கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலைகள், பல்வேறு முக்கிய சேவை களைக் கிராமங்களுடன் இணைக்கும் சாலை கள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு நமது அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது.
அதன்படி, கடந்த 13.1.2023 அன்று என் னால் சட்டப்பேரவையில் “முதல்வரின் கிரா மச்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்’’ என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் கடந்த இரண்டு ஆண்டு களில் 10 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்த 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி தற் போது வரை 8,120 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
425 உயர்மட்ட பாலங்கள்
முதல்வரின் கிராமச் சாலைகள் மேம் பாட்டுத் திட்டம், நபார்டு, ஊரக உட்கட்ட மைப்பு வளர்ச்சி நிதி, பிரதம மந்திரி கிராமச் சாலைத் திட்டம். நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழும், கடந்த 3 ஆண்டு களில் மொத்தம் 16 ஆயிரத்து 596 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மற்றும் 425 உயர் மட்டப் பாலங்கள் அமைக்கத் திட்ட அனு மதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 9 ஆயிரத்து 324 கோடியே 49 லட்சம் ரூபாய். இதனை தொடர்ந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
வருகிற இரண்டு ஆண்டுகளில் “முதல்வ ரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்” மூலம் கூடுதலாக மேலும் 10 ஆயி ரம் கி.மீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத் தப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.
சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் பாராட்டு!
கி ராமப்புறச் சாலைகள் திட்டத்தை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து சட்டமன்றக் கட்சித் தலை வர்கள் உரையாற்றினர். அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலை வர் நாகை மாலி, “இந்த அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் சாலை கட்டமைப்பு களை மேம்படுத்தி வருகிறது. இதற்காக மேற்கொண்டு வரும் பணிகள் சிறப்பாக இருக்கிறது. இதை தமிழ்நாட்டு மக்களே பாராட்டுகிறார்கள்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 13.1 . 2023 அன்று அறிவிக்கப்பட்ட முதலமைச் சர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் 10 ஆயி ரம் கிலோ மீட்டர் சாலையில் 8,120 கிலோ மீட்டருக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீண்டும் 10 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு 4000 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் வரவேற்கிறேன்” என்றும் தெரிவித்தார். மேலும், “உறுப்பினர் வேல்முருகன் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தியது போல் இந்த சாலைப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்று அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும். அதிகாரிகளே முடிவு செய்யும் நடை முறையை கைவிட வேண்டும் என்பதில் தாமும் உடன்படுகிறேன்” என்றும் நாகை மாலி குறிப்பிட்டார். முதலமைச்சரின் அறிவிப்பை எதிர்க்கட்சிகள் சார்பில் பாஜக சட்ட மன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்தி ரன் வரவேற்றுப் பேசிய நிலையில், அதன் கூட்டணி கட்சியான பாமக தலைவர் கோ.க. மணி மட்டும், பாஜக-வையும் மிஞ்சிய விசுவாசியாக நடந்து கொண்டார். வரவேற்போ, பாராட்டோ தெரிவிக்கவில்லை.