சாலை பணியாளர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை, ஜூன் 12- உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி சாலை பணி யாளர்கள் 41 மாத பணி நீக்க காலத்தைப் பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணி யாளர்கள் சங்கம் சார்பில் திருவண்ணா மலை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டத் தலைவர் கணபதி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பரிதிமாற் கலைஞர் துவக்க உரையாற்றினார். கோட்டச் செயலாளர் ஏ.ஏழுமலை விளக்க உரையாற்றினார். அரசுத்துறை சங்க நிர்வாகிகள் பி.ரகுபதி, எஸ்.பார்த்திபன், எஸ்.பச்சையப்பன், கே.பெருமாள், ஆர்.மகாலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நில அளவை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் ஜெ.ராஜா சிறப்புரை யாற்றினார். மாநிலச் செயலாளர் எம்.மகாதேவன் நிறை உரையாற்றினார். கோட்டப் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.