சென்னை,அக்.17- தமிழக - கேரள முதலமைச்சர்களின் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட ஒப்பந்த மறு ஆய்வுக் குழு, பண்டியாறு - புன்னம்புழா திட்டம் தொடர்பான குழு ஆகியவற்றிற்கு உறுப்பினர்களை நியமனம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில், கடந்த மாதம் 25-ஆம் தேதி தமிழக - கேரள முதலமைச்சர்கள் இடையே நதிநீர் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படை யில் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட ஒப்பந்த மறு ஆய்வு மற்றும் அதனைச் சார்ந்த இனங்கள் குறித்து ஒரு குழுவும், பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து மற்றொரு குழுவும் அமைக்க முடிவு செய்யப்பட்ட தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக - கேரளா அரசுகளின் செயலாளர்கள் நிலையில் குழுக்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குழுக்களின் உறுப்பினர்களாக தமிழக தரப்பு அதிகாரிகளின் பெயர்களை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.