சென்னை, ஆக.2 - சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா வெள்ளிக்கிழமை (ஆக2) நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
கல்வியில் நம்பர் ஒன் தமிழ்நாடு!
தமிழ்நாட்டு மாணவர்கள் அனைத்திலும் சிறந்தவர்களாக உள்ளனர். தமிழக மாணவர்களின் அறிவாற்றல் தேசத்திற்கு மட்டு மல்ல உலகிற்கே பெருமை. ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் மனதார வாழ்த்துகிறேன். உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் தான் இந்தியாவில் நம்பர் ஒன்றாக உள்ளது.
10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் கடந்த 3 ஆண்டு களில் சாரை சாரையாக சேர்ந்து இருக்கிறார்கள். 2022ம் ஆண்டு 75 அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்க சென்றா ர்கள். 2023ஆம் ஆண்டு 274 மாணவர்களும், இந்த ஆண்டு 447 மாணவர்கள் என இரு மடங்காக அதிகரித்துள்ளது. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 17 விழுக்காடு அதிகரித்துள்ளது.
புதுமைப் பெண் திட்டத்தின் பயனாக உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை 34 விழுக்காடு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது. நடப்பாண்டு 54 மாற்றுத்திறனாளி மாணவர்கள் முதன்மை உயர் கல்வி நிறுவனங்களுக்கு செல்கின்றனர்.
மாணவர் பயணச் செலவை ஏற்போம்
‘நான் முதல்வன்’ இணையதளம் மற்றும் மணற்கேணி செயலியில் கடந்த 10 ஆண்டுகளில் உள்ள பொதுத்தேர்வு வினாத்தாள்கள் உள்ளது. தேசிய சட்டப் பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிறுவனங்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
தைவான், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்க ழகங்களில் 14 தமிழ்நாட்டு மாணவர்கள் முழு கல்வி செலவை இலவசமாக பெற்றுள்ளனர். வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயண செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்.
விண்வெளியிலும் சாதிப்பார்கள்
வாய்ப்பு கிடைத்தால் நம் மாணவர்கள் எதையும் சாதிப்பார்கள், விண்வெளியில் கூட இனி அரசுப் பள்ளி மாணவர்கள் தான் ஆதிக்கம் செலுத்துவார்கள். மாணவர்களாகிய நீங்கள் இந்த நிலைக்கு வர பல தடைகளை தாண்டி வந்து உள்ளீர்கள்; இன்னும் தடைகள் வரலாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் க.பொன் முடி, மா.சுப்பிரமணியன்,பி.கே. சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.