சென்னை, ஆக. 27 - அறிவியலுக்குப் புறம்பாகவும், சாதி அடிப்படையிலான பாரபட்சமான பழைய குலக் கல்வியைக் திணிக்கும் விதமாகவும், கல்வியை தனியார் மயமாக்கும் வகையிலும் தேசியக் கல்விக் கொள்கை ஒன்றை மோடி அரசு கொண்டு வந்துள்ளது.
ஆனால், இதனை ஏற்க முடியாது என்று தமிழ்நாடு அரசு நிராகரித்துவிட் டது. இதன் காரணமாக, தமிழ்நாட்டு கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய பாஜக அரசு தரமறுத்தும், குறைத்தும் பழிவாங்கி வருகிறது.
அந்த வகையில், தற்போது பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டத்திற் கான நிதி ரூ. 573 கோடியையும் வழங்க மறுத்து பழிவாங்கியுள்ளது.
2024-25 கல்வி ஆண்டில், ‘சமக்ர சிக்ஷா அபியான்’ (Samagra Shiksha Abhiyan - SSA) எனப்படும், பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த திட்ட த்தை செயல்படுத்த, தமிழகத்திற்கு ஒன்றிய அரசு 4 தவணைகளில் ரூ. 2152 கோடி நிதி வழங்க வேண்டும். இதில், முதல் தவணையாக கடந்த ஜூன் மாதம் ரூ. 573 கோடியை ஒன்றிய அரசு வழங்கி யிருக்க வேண்டும்.
\ஆனால், இந்த முதல் தவணை ரூ. 573 கோடியை ஒதுக்க வலியுறுத்தி ஒன் றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு பல முறை கடிதம் எழுதியும், இதுவரை நிதி மட்டு மல்ல, பதில் கடிதம் கூட வரவில்லை.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ், அரசு மற்றும் தனியார் பள்ளி களில் சேர்க்கப்படும் 25 சதவிகித மாண வர்களுக்கான செலவை எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் தான் தமிழ்நாடு அரசு வழங்குகிறது. எஸ்.எஸ்.ஏ. திட்டத்தை, ஒன்றிய அரசின் 60 விழுக்காடு பங்களி ப்புடன் செயல்படுத்தி வருகிறது.
ஆனால், ஒன்றிய அரசு நிதியை விடுவிக்காததால் சில மாதங்களாக தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்தே எஸ். எஸ்.ஏ. திட்டம் செயல்படுத்தப்படு கிறது. எஸ்.எஸ்.ஏ. திட்டத்தை ஒன்றிய அரசின் பங்களிப்பின்றி தொடர்ந்து செயல்படுத்தினால் தமிழ்நாடு அர சுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும்.
இதனால் 8 லட்சம் மாணவர்கள் படிக்கிற மாநில கல்வித்துறை கடும் பொருளாதார மற்றும் நிர்வாக நெருக்கடியில் சிக்கியுள்ளது. சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.