சென்னை, மே 30 - சென்னையில் கொரோனா பரவலை தடுக்க வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஆயிரத்து 400 படுக்கை களுடன் தயாரான கொரோனா வார்டை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதா கிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கொரோனா பாதிப்பு அதி கம் இல்லாதவர்களுக்கு வாரிய குடி யிருப்பில் அமைய உள்ள மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும். கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது. கொரோனா குறித்து மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. கொரோனா நோயாளிகளிடம் வேறுபாடு காட்டாதீர்கள். 140 சுகாதார மையங்களில் காய்ச்சலை அறிய சோதனை செய்யப்படும். சென்னையில் கொரோனா பரவலை தடுக்க இனிவரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் என்றார்.