வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்
சென்னை, அக். 30 - அடையாறு கரையோரம் உள்ள குடியிருப்புகளை அகற்றும் முயற்சியை கைவிட வலியுறுத்தி புதனன்று (அக்.30) மாம்பலம் வட்டாட்சியர் அலுவல கத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி 137, 138 வட்டங்களில் அடையாற்றின் கரை யோரம் டாக்டர் கானு நகர், சூளை பள்ளம், சஞ்சய் காந்தி காலனி, சத்திய மூர்த்தி பிளாக், திருநகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் குடி யிருந்து வருகின்றனர். இக்குடியிருப்பு களை அப்புறப்படுத்தும் வகையில் பொதுப்பணித்துறை சார்பில் அடை யாளக் குறியீடு வைக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளை அப்புறப்படுத்தப் போவதாக தனிப்பட்ட முறையில் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடி யிருப்புகளை அகற்றும் முயற்சியை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருகம்பாக்கம் பகுதி சார்பில் சூளைப்பள்ளத்திலிருந்து கொட்டும் மழையில் பேரணி புறப்பட்டது. பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குவிந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இத்திட்டத்தின் தன்மை, அடை யாறு ஆற்றில் இருந்து எவ்வளவு தூரம் நிலங்களை எடுக்கப் போகிறார்கள், எத்தனை வீடுகளை அகற்றப்போகி றார்கள் என்பது குறித்து அரசு வெளிப்படையாக தெரிவிக்க மறுக்கி றது. இதனை தவிர்க்க வேண்டும். தனியார் பள்ளிகள், மருத்துவமனை கள் போன்றவற்றிற்கு பட்டா கொடுத்து விட்டு, ஏழை எளிய மக்களுக்கு பட்டா அளிக்க அரசு மறுப்பது ஏன்? என்று போராட்டத்தில் கேள்வி எழுப்ப ப்பட்டது. இதனை தொடர்ந்து சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.செல்வா, பகுதிச் செயலா ளர் சி.செங்கல்வராயன், நிர்வாகிகள் ரவி, கந்தன், விஜயகுமாரி ஆகியோர் உதவி வட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அதில், “எத்தகைய திட்டமாக இருந்தாலும் அப்பகுதி மக்கள், அரசியல் இயக்கங்களிடம் கலந்தாலோசித்து ஒப்புதல் பெற்ற பிறகே செயல்படுத்த வேண்டும். அரசு வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினர். மனுவை பெற்றுக்கொண்ட உதவி வட்டாட்சியர், இது தொடர்பாக மாவட்ட ஆட்சி யருக்கு பரிந்துரைப்பதாக உறுதிய ளித்தார்.