அடிப்படை பிரச்சனைகளை வலியுறுத்தி குடியிருப்போர் சங்க கூட்டமைப்பினர் பிரச்சாரம்
கடலூர், ஜூன் 14 - கடலூர் மக்களின் அடிப்படை வசதிகளை நிறை வேற்ற வலியுறுத்தி குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நகர்களில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளான பாதாள சாக்கடை, குடிநீர், போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்பு, வெள்ள பாதிப்பு, சாலை வசதி, நவீன பேருந்து நிலைய வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து இதனை மாவட்ட நிர்வாகம் மாந கராட்சி நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி வீடு வீடாக சென்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது. கோண்டூரில் தொடங்கி நத்தப்பட்டு, தோட்டப்பட்டு, குண்டு உப்புல வாடி, பாதிரிக்குப்பம், திருவந்திபுரம், கங்கணம் குப்பம், வரதராஜன் நகர், செம்மண்டலம் உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளிலும் வீடு, வீடாக மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்திற்கு கூட்டமைப்பின் சிறப்பு தலைவர் எம்.மருதவாணன், பொதுச் செயலாளர் பி.வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கி னார். நிர்வாகிகள் ரங்கநாதன், சண்முகம், பிர பாகரன், பகிரதன், செல்வராஜ், குமார், ஜெயபால் கண்ணன், தனுஷ், இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பிரச்சார இயக்கம் ஜூன் 21ஆம் தேதி வரையில் பல்வேறு பகுதியில் நடைபெற உள்ளது.